மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
null

பங்குனி மாத ராசிபலன்

Published On 2024-03-13 05:07 GMT   |   Update On 2024-03-13 05:44 GMT

வரவை அறிந்து செலவு செய்ய வேண்டும் என்று கூறும் மகர ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் சுக்ரன் மற்றும் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. தொகை வரவு திருப்தி தரும். பாதச் சனியின் ஆதிக்கத்தால் பலன் அதிகம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு உயர் நிலையை அடைய வழிபிறக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட் களையும் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

செவ்வாய் - சனி சேர்க்கை

மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்குள்ள சனியோடு மாதம் முழுவதும் இணைந்து சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். சுக ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், தன ஸ்தானத்தில் இருப்பது யோகம்தான். இருந்தாலும் பகை கிரகமான சனியோடு இணைந்திருப்பதால் குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். சொத்துத் தகராறுகளும், சொந்த பந்தங்களால் வாக்குவாதங்களும் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் கூடும். வருமானம் ஒருபுறம் வந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உங்களை நம்பி ஒப்படைத்த முக்கிய பொறுப்புகளை, மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். சனி - செவ்வாய் வழிபாடு தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும்.

புதன் வக்ரம்

மீன ராசியில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், பங்குனி 13-ந் தேதி வக்ரமும் அடைகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். 6-ம் இடத்திற்கு அதிபதியான அவர், 3-ம் இடத்தில் வலிமை இழப்பது யோகம்தான். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். வள்ளல் களின் ஒத்துழைப்பும், வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் இதுவரை தடைப்பட்ட பதவி உயர்வு இப்பொழுது தானாக வந்துசேரும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். அதே நேரம் 9-ம் இடத்திற்கு அதிபதியாகவும் புதன் விளங்குவதால், பாகப்பிரிவினைகள் முடிவாவதில் தாமதம் ஏற்படும். தந்தை வழி உறவிலும் விரிசல் உண்டு.

மீனம் - சுக்ரன்

பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தன்னுடைய உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உச்சம்பெறுவது யோகம்தான். பிள்ளைகளால் பெருமை வந்துசேரும். அவர்கள் படிப்பிற்கேற்ற வேலை கிடைத்து சம்பாதிக்கத் தொடங்குவர். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. சொந்தங்கள் பாராட்டும் விதத்தில் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகளை மேலதிகாரிகள் கொடுப்பர்.

பொதுவாழ்வு மற்றும் அரசியலில் உள்ளவர்களுக்கு, நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களால், புதியவர்களை நம்பி செயல்பட இயலாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். தீவிர முயற்சியால் கலைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பொருளாதாரம் திருப்தி தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

மார்ச்: 14, 15, 26, 27, 29, 30, 31, ஏப்ரல்: 6, 7, 11, 12.

மகிழச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

Similar News