என் மலர்tooltip icon

    மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

    மகரம்

    2025 கார்த்திகை மாத ராசிபலன்

    மகர ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, குடும்ப ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. உச்சம் பெற்ற குருவின் பார்வை பதிவதால் மிச்சம் வைக்கும் விதத்தில் பொருளாதார நிலை உயரும். வாக்கிய கணித ரீதியாக இன்னும் சில மாதங்களுக்கு ஏழரைச்சனி இருக்கிறது. அதுவரை நன்மையும், தீமையும் கலந்து நடைபெற்றாலும், குரு பார்வை இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. பொருளாதாரம் தேவைக்கேற்ப வந்து திருப்திப்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும் விதம் அமையும்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். 'குரு பார்த்தால் கோடி நன்மை' என்பது ஜோதிட விதி. அந்த அடிப்படையில் பார்வை பலன் நன்மை செய்தாலும் கார்த்திகை 2-ந் தேதி முதல் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். எனவே கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். இருப்பினும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது தொழில் போட்டி அகலும். எதிரிகள் விலகுவர். வருமானம் அதிகரிக்கும். கிளைத் தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமி விற்பனையாலும் லாபம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும் நேரம் இது.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். தாய்வழி ஆதரவோடு சில நலன்களைப் பெறுவீர்கள். 'பழைய வாகனங்கள் பழுதாகி செலவு வைக்கின்றதே' என்று கவலைப்பட்டவர்கள், புதிய வாகனங்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி, விருச்சி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஊதிய உயர்வு இப்பொழுது கிடைக்கும். வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும். பிள்ளைகளின் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. சமூகத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பர். கலைஞர்களுக்கு முயற்சி களில் வெற்றி உண்டு. மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் கூடும். பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 20, 21, 27, 28, டிசம்பர்: 2, 3, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    மகரம்

    2025 ஐப்பசி மாத ராசிபலன்

    மகர ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். அதிலும் அவர் உச்சம் பெற்றிருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் இருந்த குறுக்கீடுகள் அகலும். 'குரு பார்வை கோடி நன்மைக்கு வித்திடும்' என்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பகை அனைத்தும் உறவாகும். பாதியில் நின்ற பல பணிகள் ஒவ்வொன்றாக முடியும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும் மாதம் இது.

    உச்சம் பெற்ற குரு

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அதிசார கதியில் வந்தாலும் சப்தம ஸ்தானம் என்பதால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெற வழிவகுத்துக் கொடுப்பார். 'இதுவரை சேமித்த சேமிப்புகள் கரைந்துவிட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதை ஈடுகட்டும் வாய்ப்புகள் வந்துசேரும். குருவின் பார்வையால் தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு.

    சனி - ராகு சேர்க்கை

    மாதம் முழுவதும் தன ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். இரண்டில் ராகு இருப்பதால் திரண்ட செல்வம் வரும். என்றாலும் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். சனி உங்கள் ராசிநாதனாகவும் இருப்பதால் உடல் நலத்திற்காக சிறிது செலவிடும் சூழல் உண்டு. குடும்பத்தினரின் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கலாம். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையலாம்.

    விருச்சிக - செவ்வாய்

    ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். தொழிலில் கிளைத் தொழில்கள் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். தாய்வழி ஆதரவு உண்டு. 'கட்டிடம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு இன்னும் கை கூடவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அது கைகூடும். எதையும் துணிந்து செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். நாள்பட்ட நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவர்.

    துலாம் - சுக்ரன்

    ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகின்றது. உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பப் பிரச்சனை அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டம் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதோடு கேட்ட சலுகைகளும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் உண்டு. சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு இலாகா மாற்றங்களும், ஊதிய உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சியில் வெற்றி உண்டு. மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். தன வரவு திருப்தி தரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 20, 21, 23, 24, நவம்பர்: 1, 2, 5, 6, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    மகரம்

    2025 புரட்டாசி மாத ராசிபலன்

    மகர ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். அதே நேரத்தில் அஷ்டமத்தில் சுக்ரனோடு கேது இணைந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. எதிர்பார்த்த காரியங்களில் எண்ணற்ற தடைகளும், தாமதங்களும் வந்து சேரும். எதிலும் ஈடுபாடு ஏற்படாமல் மனம் அலைபாயும். அதுமட்டுமல்லாமல் மனதில் ஏதோ ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். பிறரின் உதவியை பெறுவதிலும் தாமதம் ஏற்படும். குருவின் அதிசார பெயர்ச்சிக்கு பிறகு நெருக்கடி நிலை அகன்று நிம்மதி கிடைக்கும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். 'பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டு புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதற்கு ஏற்ற விதம் சம்பள விகிதமும் கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தி ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள முயற்சிப்பீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும் நேரம் இது.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பது ஒரு அற்புதமான நேரமாகும். ஏழரைச் சனி நடந்தாலும் கூட குருவின் பார்வையால் நல்ல மாற்றம் இல்லம் தேடிவரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்க குரு பகவானை வழிபடுவது நல்லது. சப்தம ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையை செவ்வனே செய்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமை பதவி தானாக வந்துசேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். தொழில் சிறப்பாக நடைபெறும். என்னயிருந்தாலும் ஏழரைச் சனி நடைபெறுவதால் திடீர் செலவுகளை சமாளிக்க கூடிய சூழல் உருவாகும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தன ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் ஆரோக்கிய சீர்கேடுகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் உண்டு. குடும்ப பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம். 'கட்டிய வீடு பாதியில் நிற்கிறதே' என்று கவலைப் படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. பணத்தேவை அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றமும் இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி புரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். கலைஞர்களுக்கு அதிக முயற்சி தேவை. மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப சுமை கூடும்.பயணங்களால் விரயம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 22, 23, 26, 27, அக்டோபர்: 5, 6, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    மகரம்

    2025 ஆவணி மாத ராசிபலன்

    மகர ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ் சரிக்கிறார். அவரோடு கூட ராகுவும் இணைந்திருக்கிறார். ராகுவைப் போல கொடுப்பானுமில்லை என்பார்கள். அந்த அடிப்படையில் வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருப்பதால் செலவுகள் நிறைய ஏற்படும். சுபச் செலவுகளாக செய்வது நல்லது. இடர்பாடுகளுக்கு நடுவில் முன்னேற்றம் ஏற்படும். என்றாலும் வருமானப் பற்றாக்குறை ஏற்படாது. இதுபோன்ற வக்ர காலங்களில் இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது நல்லது.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சப்தம ஸ்தானத்திற்கு வரும்போது, புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ் கூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொல்லைகள் அகலும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கி வந்த உங்களுக்கு, தொடர்ந்து வருமானம் வந்து கொண்டேயிருக்கும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிட வேண்டாம். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி 8-ல் வருவது நல்ல நேரம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் அமையலாம். வெளிநாடு சென்று பணிபுரியவேண்டும் என்று விரும்பு பவர்களுக்கு, அதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். பொதுவாழ்வில் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை எதிர்பார்த்த பொறுப்புகள் இப்பொழுது கிடைக்கும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வருவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். வியாபாரம் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவு தருவர். வளர்ச்சி அதிகரிக்கும் நேரம் இது. இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். கட்டிடம் கட்டும் பணி தொடரும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரத்தில், கொஞ்சம் கவனமாகச் செயல்பட வேண்டும். விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவு குறையும். தொழிலில் யாரையும் நம்பிச் செயல்பட இயலாது. தொழில் போட்டிகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குத் தலைமையின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். பணவரவு திருப்தி தரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 20, 25, 26, 30, 31, செப்டம்பர்: 1, 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    மகரம்

    வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை

    27.7.2025 முதல் 2.8.2025 வரை

    பொருளாதாரப் பற்றாக்குறைகள் அகலும் வாரம்.ராசிக்கு சூரியன் மற்றும் புதன் பார்வை உள்ளது. நல்ல மாற்றங்கள் வந்து சேரும். திடீர் அதிர்ஷ்டம், கவுரவப் பதவிகள், மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும்.தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள்.

    எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். நோய் தொல்லை கட்டுக்குள் இருக்கும். பொய்யான கெட்ட வதந்ததிகளால் ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும். பயணங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்

    கொடுத்த வாக்கை காப்பாற்றி வம்பு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். 28.7.2025 அன்று பகல் 12 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவுகளின் நியாயமற்ற நடவடிக்கைகள் மனதில் குழப்பத்தைத் தரும். பண விஷயத்தில் மிகவும் விழிப்புடன் இருப்பது நல்லது. ஆடி வெள்ளிக்கிழமை வயதான சுமங்கலி பெண்களிடம் நல்லாசி பெறவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    2025 ஆடி மாத ராசிபலன்

    மகர ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அவர் மீது செவ்வாயின் பார்வை பதிகிறது. இது அவ்வளவு நல்லதல்ல. உடல் நிலையிலும், மன நிலையிலும் தெளிவில்லாத சூழ்நிலை உருவாகும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய இயலாது. இடர்பாடுகளுக்கு நடுவில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பற்றாக்குறை உண்டு. உறவினர்களுக்குள் பகை உருவாகும் நேரம் இது. கவனமாக செயல்படுங்கள். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் நற்பலன்களை வழங்கும்.

    மிதுன - சுக்ரன்

    ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது, உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஊர் மாற்றம், இடமாற்றம் உறுதியாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக, மாற்று மருத்துவம் கைகொடுக்கும். எதிரிகளின் பலம் மேலோங்கி இருக்கும் இந்த நேரத்தில், எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம். வியாபாரம் மற்றும் தொழிலில் 'பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டு, புதியவர்களை சேர்த்துக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் கொஞ்சம் தாமதப்படத்தான் செய்யும்.

    கன்னி - செவ்வாய்

    ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். எனவே உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் பலம் பெறுவதால் நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும். தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. இடம், பூமி வாங்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு வேண்டிய சலுகைகளை வழங்குவர். இருப்பினும் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு வெளியில் வரும் சிந்தனை அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள்.

    கடக - புதன்

    ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் போது, வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். 'வாழ்க்கைக் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலையும் கிடைத்து, உதிரி வருமானங்களும் பெருகும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, அவர்கள் வெளிநாடு சென்று பணிபுரிவது தொடர்பாகவோ முயற்சி செய்தால் அதில் அனுகூலம் உண்டு.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு அதிக முயற்சி செய்வதன் மூலம் பலன் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். வருமானப் பற்றாக்குறை உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 18, 19, 29, 30, ஆகஸ்டு: 3, 4, 5, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    மகரம்

    2025 ஆனி மாத ராசிபலன்

    முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்ட மகர ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி குடும்ப ஸ்தானத்தில் ராகுவோடு சஞ்சரிக்கிறார். அவர் மீது செவ்வாயின் பார்வை விழுகிறது. மேலும் குரு பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பகைக்கு மத்தியில் வாழ்க்கை அமையும். எண்ணற்ற பிரச்சினைகள் இல்லம்தேடி வந்துசேரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத சூழலும், கொடுக்கல் - வாங்கல்களில் தடுமாற்றங்களும் ஏற்படும். மனக் கவலை அதிகரித்து மற்றவர்களின் உதவியை நாடக்கூடிய சூழ்நிலையும் உண்டு. எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. புது முயற்சிகளில் தாமதம் ஏற்படும். கோபத்தின் காரணமாக பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

    கடக - புதன்

    ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதாரம் திருப்தி தரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். தடைகளும், தாமதங்களும் விலகும். பூர்வீகச் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் மும்முரம் காட்டுவீர்கள். எதிரிகளின் தொல்லை குறையும். பிள்ளைகளின் நீண்டநாளைய எண்ணங்கள் நிறைவேற எடுத்த முயற்சி கைகூடும். வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருந்தாலும் அதை சமாளிக்கும் விதத்தில் உதிரி வருமானங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் உங்களிடம் வழங்குவர்.

    ரிஷப - சுக்ரன்

    ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது, பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்தும் கிடைக்கும். பெண் குழந்தைகளின் சுபசடங்குகள் நடைபெறும் நேரமிது. திருமண வயதடைந்த பிள்ளைகளுக்கு இதுவரை வந்த வரன்கள் முடிவடையவில்லையே என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது மகிழ்ச்சியடையும் விதத்தில் நல்ல வரன்கள் வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அதற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.

    செவ்வாய் - சனி பார்வை

    மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவரை பகை கிரகமான செவ்வாய் பார்க்கும் பொழுது பணத் தட்டுபாடுகள் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் மாற்றங்கள் மனக் குழப்பத்தை உருவாக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகி, சங்கிலி தொடர்போல கடன்சுமை கூடும். மருத்துவச் செலவுகள் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு முதலீடுகள் செய்வதில் தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் அனுசரிப்பு குறையும். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு வருமானம் குறையும், வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.

    இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியை கூட்டும்.

    மகரம்

    2025 சித்திரை மாத ராசிபலன்

    சேவை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் மகர ராசி நேயர்களே!

    விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, குடும்ப ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். பஞ்சம ஸ்தானத்தில் குரு - சுக்ர பரிவர்த்தனை நிகழ்கிறது.

    அங்ஙனம் பரிவர்த்தனை பெற்ற குரு உங்கள் ராசியை பார்ப்பதால் தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பண நெருக்கடி அகலும். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும்.

    குரு - சுக்ர பரிவர்த்தனை

    சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு 3, 12-க்கு அதிபதியானவர் குரு. சகாய ஸ்தானாதிபதி பரிவர்த்தனையாகும் இந்த நேரத்தில் தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும்.

    வருங்காலம் பற்றிய பயம் அகலும். உடன்பிறப்புகளின் வழியில் நடைபெறும் சுபகாரியத்தை முன் நின்று நடத்தி பெருமை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தலைதூக்கிய பிரச்சினை இப்பொழுது நல்ல முடிவுக்கு வரும்.

    கும்ப - ராகு, சிம்ம - கேது

    சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். தன ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கணிசமான லாபம் கைகளில் புரளும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனித பயணங்கள் அதிகரிக்கும். அஷ்டமத்தில் கேது வருவதால் அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கும். அதிக பொறுப்புகளை மேலதிகாரிகள் உங்களிடம் ஒப்படைப்பார்கள். எதையும் உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

    பயணங்களால் அலைச்சல் ஏற்படுமே தவிர, ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். வெளிநாடு சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், சொந்த ஊரில் உள்ளவர்கள் வெளிநாடு செல்ல எடுத்த முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். இக்காலத்தில் ராகு - கேதுகளுக்குரிய சிறப்பு வழிபாடுகளை யோக பலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.

    மேஷ - புதன் சஞ்சாரம்

    சித்திரை 17-ந் தேதி, மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமாதிபதியோடு இணையும் இந்தநேரம் நல்ல நேரம்தான். 'விபரீத ராஜ யோக' அடிப்படையில் நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். அரசுவழி வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும்.

    மிதுன - குரு சஞ்சாரம்

    சித்திரை 28-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வருகிறார். அவரது பார்வை பதியும் இடங்கள் புனிதமடைகிறது. எனவே குடும்ப ஒற்றுமை பலப்படும். உடன்பிறந்தவர் களால் நன்மை உண்டு. அதிகாரப் பதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். கூட்டு குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு அகலும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் சாதனை படைக்கும் நேரம் இது. தொழில் சூடுபிடிக்கும். நல்ல சம்பவங்கள் நாளும் நடைபெறும். நாடு மாற்றம், வீடு மாற்றம் இனிமை தரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றம் தேடி வரும். கலைஞர் களுக்கு கவுரவம் உயரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயர ஆசிரியர் வழிகாட்டுவர். பெண்களுக்கு பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு நிம்மதி கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திதரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஏப்ரல்: 15, 17, 20, 22, மே: 8, 9, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    மகரம்

    2025 பங்குனி மாத ராசிபலன்

    உதவும் குணத்தால் உள்ளத்தில் இடம்பிடித்த மகர ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி குடும்ப ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் ரிஷபத்தில் இருக்கும் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியான மாதமாகவே அமையப்போகிறது. தொட்டது துலங்கும்.

    தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். வெற்றிக்குரிய செய்தி வீடு வந்துசேரும். விரும்பும் விதத்தில் உத்தியோகத்தில் பணிமாற்றம் கிடைக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் நன்மை கிடைக்கும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாதத்தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் நீச்சம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். என்றாலும் பாக்கிய ஸ்தானத்திற்கும் அவர் அதிபதியாவதால், சில காரியங்கள் முடிவடைவதில் தடைகள் ஏற்படும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்களில் தாமதங்கள் உருவாகும். வாகனப் பழுதுகளால் வாட்டம் உண்டு. வரவை விட செலவு அதிகரிக்கும். வழக்குகளும், வாய்தாக்களும் வந்து கொண்டே இருக்கும். தசா புத்திக்கு ஏற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது மன அமைதிக்கும், வருமான உயர்வுக்கும் வழிவகுக்கும்.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    பங்குனி 4-ந் தேதி புதன், கும்ப ராசிக்கு வக்ர இயக்கத்தில் வருகிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான புதன், தன ஸ்தானத்திற்கு வரும் பொழுது பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. உத்தியோக மாற்றத்தை விரும்புபவர்களுக்கு உயர் பதவியுடன் கூடிய மாற்றங்கள் வரலாம். இதுவரை கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். குருவின் பார்வை கைகொடுப்பதால் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

    மீன - சுக்ரன் வக்ரம்

    மீனத்தில் உள்ள சுக்ரன் இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உச்சமும், வக்ரமும் பெறுவதால் பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வரலாம். பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் அண்ணன், தம்பிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வரலாம். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. 'நினைத்தது நிறைவேறவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். சங்கிலித் தொடர் போல கடன் சுமை வந்துசேரும்.

    கடக - செவ்வாய்

    பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தாயின் உடல்நலத்தில் பிரச்சினைகள் உருவாகும். வாங்கிய சொத்துக்களால் வில்லங்கங்கள் ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் விலகிக்கொள்வதாக சொல்லி அச்சுறுத்துவர். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். கடன் சுமையின் காரணமாக கட்டிய வீட்டை விலை பேசும் சூழல் உருவாகலாம். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய உத்வேகத்துடன் செயல்படும் நிலை உருவாகும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகள் பாராட்டும் விதம் செயல்படுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு மாதத்தின் மையப்பகுதியில் நல்ல தகவல் வந்துசேரும். மாணவ - மாணவிகள், அதிக மதிப்பெண் எடுப்பதிலேயே குறிக்கோளாக இருப்பர். பெண்களுக்கு பிரச்சினைகளில் இருந்து விடுபடும் சூழல் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 15, 16, 19, 20, 27, 28, 31, ஏப்ரல்: 1, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    மகரம்

    2025 மாசி மாத ராசிபலன்

    விட்டுக்கொடுத்துச் செல்லும் குணம் படைத்த மகர ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி, அஷ்டமாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் சனி இருப்பதால் குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு இதயத்தை வாட வைக்கும். புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பி செயல்பட இயலாது.

    பொறுப்புகளை சொல்வதால் சிக்கல்கள் ஏற்படும். துரிதமாக முடிவடைய வேண்டிய காரியங்கள் கூட இழுபறி நிலையில் இருக்கும். இக்காலத்தில் சனிக்குரிய சிறப்பு தலங்களுக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வருவது நல்லது.

    சூரியன் - சனி சேர்க்கை

    இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி சூரியன், தனாதிபதி சனியோடு சேரும் இந்த நேரத்தில், மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். பொருள் விரயங்களும், புதிய முயற்சிகளில் போராட்டங்களும் ஏற்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடித்தாலும், அவற்றில் திருப்தி இருக்காது. எதையும் ஒரு முறைக்கு இரு முறை செய்யும் சூழல் உருவாகும்.

    'நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியவில்லையே' என்ற கவலை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு, பல பணிகள் பாதியிலேயே நிற்கும். குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம். எவ்வளவுதான் நீங்கள் விழிப்புணர்ச்சியாக செயல்பட்டாலும் விரயங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வக்ர நிவர்த்தியாவது நன்மைதான். தாய் வழி ஆதரவு கிடைக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்த வண்ணமாக இருக்கும்.

    எதிர் காலத்தை பற்றிய பயம் அகலும். இயற்கையிலேயே எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும் நேரம் இது. இருப்பினும் ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் ஒரு சில சமயங்களில் மனக் குழப்பங்களும் உடல் சோர்வும் ஏற்படலாம். அதனால் ஒருசில காரியங்களை தள்ளி வைக்க நேரிடும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான். என்றாலும் அவர் 9-க்கும் அதிபதியாக விளங்குவதால் ஒரு சில சமயங்களில் மனக்குழப்பம் ஏற்படும்.

    நன்மையும், தீமையும் கலந்து நடைபெறும் இந்த நேரத்தில், நன்மைகளை மட்டுமே சந்திக்க வேண்டுமானால் புதனுக்குரிய வழிபாடுகள் உங்களுக்கு தேவை. அனுகூலம் தரும் நாளில் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை. வெளிநாட்டு முயற்சி தாமதப்படும்.

    பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு மந்த நிலை மாறும். சிந்தனைகள் வெற்றி பெறும். பெண்களுக்கு குடும்பத்தினரின் அனுசரிப்பு குறையும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 16, 17, 21, 22, 28, மார்ச்: 1, 4, 5.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் மகர ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சுக்ரனும் இருப்பதால் குடும்ப வருமானம் உயரும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் மற்றும் கல்யாண காரியங்கள் நடைபெறும். அஷ்டமாதிபதி சூரியன் உங்கள் ராசியில் இருப்பதால் இடையிடையே எதிர்பாராத வண்ணம் திடீர் செலவுகளும் ஏற்படலாம். 'சந்திர மங்கள யோக'த்தோடு மாதம் தொடங்குவதால், சென்ற மாதத்தில் நடைபெறாமல் இருந்த பல நல்ல காரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறும்.

    மிதுன - செவ்வாய்

    தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவதால், வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்சினைகள் வரலாம். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். மனவருத்தம் தரும் செயல்கள் நடைபெறலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அது தாமதப்படும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையின் காரணமாக நீண்ட நேரம் வேலை பார்க்கும் சூழல் உருவாகும். சொத்து விற்பனையால் சில பிரச்சினைகள் வரலாம்.

    மகர - புதன்

    உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் புதனால், பூர்வீக சொத்துத் தகராறு அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் வல்லமை பிறக்கும். எதிரிகள் சரணடைவர். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் அதிக விலைக்கு விற்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் உயர் அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர். கேட்ட சலுகைகளையும் வழங்குவர். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

    கும்ப - புதன்

    தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். அவர் தன ஸ்தானத்திற்கு செல்லும்போது, தனவரவு தாராளமாக வந்துசேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்போடு பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கட்டிய வீட்டைப் புதுப்பிக்கும் திட்டம் நிறைவேறும். கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர்.

    குரு வக்ர நிவர்த்தி

    ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இதன் விளைவாக எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தூரதேசப் பயணங்கள் ஆதாயம் தருவதாக அமையும். வியாபாரத்தில் வி.ஐ.பி.க்கள் வாடிக்கையாளர்களாக மாறுவர். உத்தியோகத்தில் இதுவரை தற்காலிகப் பணியில் இருந்தவர்கள், இப்பொழுது நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்படுவர். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் பாராட்டு உண்டு. மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பார்ப்புகள் கைகூடிவரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 20, 21, 23, 24, 25, பிப்ரவரி: 1, 4, 5.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    மகரம்

    2024 மார்கழி மாத ராசிபலன்

    நம்பி வந்தவர்களுக்கு உதவும் மகர ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல செவ்வாயின் பார்வையும் சனி மீது பதிகிறது. எனவே வருமானம் எவ்வளவுதான் வந்தாலும், செலவு இரு மடங்காகலாம்.

    குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக் குறைவும், மருத்துவச் செலவும் ஏற்படும். சகோதர வர்க்கத்தினரின் அனுசரிப்பு குறையலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படும். 'தான் உண்டு தன் வேலை உண்டு' என்று இருப்பதே உத்தமம்.

    செவ்வாய் - சுக்ரன் பார்வை

    மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். சுக்ரன், கும்பத்திற்கு சென்ற பிறகும், அவரை செவ்வாய் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவரது பார்வை தொடர்ந்து சுக்ரன் மீது பதிவதால் 'சுக்ர மங்கள யோகம்' உருவாகின்றது. எனவே இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும்.

    வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். சகோதர வர்க்கத்தினரின் பகையை வளரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    குரு வக்ரம்

    உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறும் பொழுது நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். இடமாற்றம், வீடு மாற்றம் உறுதியாகலாம். 12-ம் இடத்திற்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான்.

    என்றாலும் வெற்றிகள் ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு விளங்குவதால், பஞ்சாயத்துகள் இழுபறி நிலையில் இருக்கும். பாகப்பிரிவினைகள் முடிவடையாது. எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். இல்லத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் என்னதான் செய்தாலும் அவர்கள் நன்றி காட்டமாட்டார்கள்.

    கும்ப - சுக்ரன்

    மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான அவர் தன ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். தொட்டது துலங்கும். தொழில் வளம் மேலோங்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும்.

    வீண் வாக்குவாதங்களை கைவிட்டால், பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரலாம். இருப்பினும் ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    தனுசு - புதன்

    மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ல் சஞ்சரிக்கும் போது, திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர் மாற்றமும், ஏற்றமும் வரலாம். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும். வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக நடைபெறும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து வருமானம் உயரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 23, 24, 27, 28, 29, ஜனவரி: 4, 5, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    ×