என் மலர்tooltip icon

    மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

    மகரம்

    2024 கார்த்திகை மாத ராசிபலன்

    சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, தன ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே இந்த மாதம், சென்ற மாதத்தை காட்டிலும் சிறந்த பலன்களை வழங்கப்போகிறது.

    செல்வ நிலை உயரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தாமதித்து வந்த சுப காரிய பேச்சுகள் இப்பொழுது முடிவுக்கு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.

    குரு வக்ரம்

    ரிஷப ராசியில் உள்ள குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். விரயாதிபதி குரு வக்ரம் பெறுவது நன்மைதான். அதே சமயம் சகாய ஸ்தானத்திற்கும் குரு அதிபதி என்பதால், முன்னேற்றத்தில் சில சறுக்கல்களும் வரத்தான் செய்யும்.

    முக்கிய புள்ளிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். நல்ல சந்தர்ப்பங்கள் வந்தாலும், அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு குறையலாம். அவர்களுக்காக செலவு செய்யும் சூழல்நிலையும் உண்டு.

    சனி - செவ்வாய் பார்வை

    கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். செவ்வாயின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் குடும்பச் செலவு அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்களில் ஒரு சிலர் ஏமாற்றத்தை சந்திப்பார்கள்.

    வீடு கட்டுவது, கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். 'வியாபார இடத்தை வேறு இடத்திற்கு மாற்றலாமா?' என்ற யோசனை அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை முன்நின்று நடத்தி வைப்பீர்கள்.

    மகர - சுக்ரன்

    கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு வரும் சுக்ரனால் நன்மைதான். பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசிக்கு வரும் பொழுது மிகுந்த நன்மைகளை வழங்குவார்.

    திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மனதில் நினைத்ததை மறு கணமே செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவதில் கவனம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் நேரம் இது.

    செவ்வாய் வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் அடைகிறார். உங்கள் ராசிக்கு லாபாதி பதியான செவ்வாய் வக்ரம் பெறுவதால், பண நெருக்கடி அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களை விட்டு விலகலாம். குடும்பச் சுமை கூடும்.

    கொடுக்கல்- வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படும். 'வீடு மாற்றம் செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள். பொதுவாக பொறுமை அதிகம் தேவைப்படும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

    உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் சிலருக்கு மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு செல்வாக்கு உயரும். மாணவ - மாணவி களுக்கு முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் நேரம் இது. பெண்களுக்கு வருமானம் உயரும். உறவினர் பகை அகலும். சுபச்செலவு அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்:- 25, 26, 30, டிசம்பர்: 1, 2, 8, 9, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    மகரம்

    2024 ஐப்பசி மாத ராசிபலன்

    நேர்மறை சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மகர ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் சனி வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கிறார். ஐப்பசி 18-ல் அவர் வக்ர நிவர்த்தியாகிறார். ராசிநாதன் வலிமை அடைவதால் சென்ற மாதத்தைக் காட்டிலும் இம்மாதம் சிறப்பாக அமையும். குருவின் பார்வையும் இருக்கிறது.

    எனவே பொன், பொருள் சேர்க்கையும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். என்ன இருந்தாலும் ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். திடீர் திடீரென மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துசேரும்.

    செவ்வாய் நீச்சம்

    ஐப்பசி 6-ந் தேதி, கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல.

    தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சில காரியங்கள் முடிவடைவது போல் இருந்து கடைசி நேரத்தில் கை நழுவிச் செல்லும். பயணங்களால் அலைச்சல் இருக்குமே தவிர ஆதாயம் இருக்காது. வாங்கிய இடத்தால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

    விருச்சிகம் - புதன்

    ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 9-க்கு அதிபதி 11-ல் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புனித பயணங்கள் அதிகரிக்கும். நெருக்கடி நிலை அகலும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும்.

    பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் எண்ணங்களை மேல் அதிகாரிகள் பூர்த்தி செய்வர். ஆரோக்கியம் சீராகும். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் ஆச்சரியம் தரும். பொருளாதார நிலை உயரும்.

    சனி வக்ர நிவர்த்தி

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். ராசிநாதன் சனி பலம் பெறுவது நல்ல நேரம்தான். ஆரோக்கியம் சீராகும். அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும். தடைகள் தானாக விலகும். தர்ம காரியங்கள் செய்ய முன் வருவீர்கள். வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும்.

    வேற்று மனிதர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. நினைத்தது நிறைவேறும் நேரம் இது.

    தனுசு - சுக்ரன்

    ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளை விற்று, புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி கை கூடும்.

    பெற்றோரின் மணி விழா, பிள்ளைகளின் மண விழா உள்ளிட்ட சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகள், ஆசிரியர்களின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பர். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 18, 19, 29, 30, நவம்பர்: 3, 4, 5, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    மகரம்

    2024 புரட்டாசி மாத ராசிபலன்

    பொறுமையாக செயல்பட்டு பெருமை காணும் மகர ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் புதன் இருக்கிறார். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு' என்பார்கள்.

    எனவே பொருளாதாரநிலை திருப்திகரமாக இருக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்துகொண்டே இருக்கும். ராசிநாதன் சனி வக்ரம்பெற்று இருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் திடீரென வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிர்பந்தமும் உருவாகும். எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவர் வக்ரம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். ஆதாயம் தரும் தகவல்கள் குறைவாகவே கிடைக்கும். திட்டமிடும் எந்த காரியத்தையும் செயல் படுத்த முடியாது.

    உடலில் முன்பு தோன்றிய நோய் ஒன்று, மீண்டும் தலைதூக்கும். பணம் பல வழி களிலும் செலவாகி மனதை வாட்டும். கொடுத்த கடன் வசூலாகாமல், மன நிம்மதியை இழக்க வைக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஒரு பெரும் தொகையை செலவிடுவீர்கள்.

    புதன் உச்சம்

    புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானத்தில் பலம்பெறுவது, ஒரு அற்புதமான நேரமாகும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.

    பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். பாகப்பிரிவினையில் எதிர்பார்த்த பங்கு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலை விரிவுசெய்ய பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள், உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வேலை நுணுக்கங்களையும் கற்றுக்கொடுப்பர். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும்.

    துலாம் - சுக்ரன்

    புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சுக்ரனுக்கு அது சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தொழில் ஸ்தானாதிபதியான அவர் தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது, ஒரு அற்புதமான நேரமாகும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். தொழில் சூடுபிடிக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

    படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு, இப்பொழுது வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஒரு வருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் சூழ்நிலை உருவாகி பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இக்காலம் ஒரு இனிய காலமாகும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்லவிதமாக கிடைக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சியால், இதுவரை கைகூடாத ஒரு சில காரியங்கள் இப்பொழுது கைகூடும்.

    வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேல் இடத்து நிர்பந்தம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கலைஞர்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும். மாணவ- மாணவிகள், கல்வியில் கவனச் சிதறல் ஏற் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து பேசுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 17, 18, 20, 21, அக்டோபர்: 2, 3, 6, 8, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    மகரம்

    2024 ஆவணி மாத ராசிபலன்

    எதையும் திட்டமிட்டு செய்து வெற்றியைப் பெறும் மகர ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். அவர் மீது சூரியனின் பார்வை பதிகிறது. அதே நேரம் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே சில தடைகளும், தாமதங்களும், குறுக் கீடுகளும் ஏற்படும்.

    இருப்பினும் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவிடும். வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். உத்தியோகம் மற்றும் தொழிலில் மாற்றமும், ஏற்றமும் கிடைக்கும் மாதம் இது.

    சனி - சூரியன் பார்வை

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்கிறார். இந்த பகைக் கிரகங்களின் பார்வையால், குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பு கள் நடைபெறாமல் போகலாம். ஒரு சில காரியங்களில் இழப்புகளும் ஏற்படும்.

    உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம் ஏற்பட்டு, மனக்குழப்பத்தை அதிகரிக்கச் செய்யும். உற்றார் - உறவினர்களின் ஆதரவு குறையாமல் இருக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இதுபோன்ற காலங்களில் நிதானத்தோடும், அமைதியோடும் செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் காக வாகனத்தானையும், சூரிய பகவானையும் கை தொழுது வழிபட வேண்டும்.

    சுக்ரன் நீச்சம்

    ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக பிள்ளைகள் வழியிலும் பிரச்சினைகள் வரலாம். பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துகளாலும் பிரச்சினைகள் வரலாம்.

    நினைத்த காரியத்தை உடனடியாக செய்ய முடியாது. சகோதர வழியில் செலவுகள் அதிகரிக்கும். தொழிலை மாற்றுவது பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீ காரம் கிடைக்காது. சகப் பணியாளர்களின் அனுசரிப்பு குறையலாம்.

    மிதுன - செவ்வாய்

    ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். பணிபுரியும் இடத்தில் உங்களையும் ஒரு பங்குதாரர் களாக சேர்த்துக் கொள்வதாகச் சொல்லலாம். தொழில் நடத்துபவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும்.

    நடத்தும் தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். பெற்றோரின் ஆதரவு பெருமை சேர்க்கும். புண்ணிய தலங்களுக்கு எண்ணியபடியே சென்று வழிபட்டு வருவீர்கள். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் யோகம் உண்டு.

    சிம்ம - புதன்

    ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான புதன், 8-ம் இடத்திற்கு வரும் பொழுது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, திடீர் திடீரென நல்ல மாற்றங்கள் வந்துசேரும். எதையும் சிந்திக்காமல் செய்தால் கூட சிறப்பான பலன் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும்.

    புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும். பொதுவாக இக்காலத்தில் எடுத்த முயற்சி கள் அனைத்தும் வெற்றியாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும்.

    வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள், அதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர். கலைஞர்களுக்கு கவுரவம் - அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு வரன்கள் வாசல் தேடி வரும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 21, 22, 24, 25, செப்டம்பர்: 5, 6, 7, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

    மகரம்

    ஆடி மாத ராசிபலன்

    உதவும் குணத்தால் பிறரின் நன்மதிப்பை பெறும் மகர ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியை பார்க்கிறார். அதே நேரம் ராசிநாதன் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். தடைகளும், தடுமாற்றமும் வந்துசேரும். என்றாலும் குரு பார்வையால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். சுப விரயங்கள் அதிகரிக்கும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள், இம்மாதத்தில் முடிவடையும். உத்தியோகத்தில் கேட்ட மாறுதல்கள் கிடைக்கலாம்.

    குரு - செவ்வாய் சேர்க்கை

    மாதத் தொடக்கத்திலேயே குருவும், செவ்வாயும் இணைந்து, உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு - செவ்வாய் சேர்க்கை நன்மைதான் என்றாலும், குரு விரயாதிபதியாக இருப்பதால் விரயங்கள் அதிகமாகத்தான் இருக்கும். வீடு, இடம் வாங்குவதற்காகவும், வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்காகவும் செலவிடுவீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் வரலாம். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் பாகப்பிரிவினைக்கு சம்மதிப்பார்கள்.

    புதன்-வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது யோகம்தான். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். கூடுதல் பொறுப்பும், அதிக சம்பளமும் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். 'ரண சிகிச்சை செய்ய வேண்டும்' என்று சொன்ன மருத்துவர்கள், இப் பொழுது சாதாரண சிகிச்சையிலேயே நோயை குணமாக்கிவிடுவர். அதே நேரம் புதன் உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியாகவும் விளங்குவதால், ஒருசில சமயங்களில் மனக்குழப்பத்தால் அவதிப்படுவீர்கள்.

    சிம்ம - சுக்ரன்

    ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகும். அவர்களை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களால் சில விரயங்கள் ஏற்படும். தொழில் மாற்ற சிந்தனை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்பு களுக்கு மத்தியில் உங்கள் வாழ்க்கை அமையும். இறை வழிபாடும், தன்னம்பிக்கையும் தான் இக்காலத்தில் கைகொடுக்கும். தொழிலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற இறக்க நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. கலைஞர்கள், சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்வது நல்லது. மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். பெண்கள், முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நேரம் இது. கடன் சுமை குறையும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 17, 18, 24, 25, 28, 29, ஆகஸ்டு: 8, 9, 13, 14, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    மகரம்

    ஆனி மாத ராசிபலன்

    வரவை அறிந்து செலவு செய்ய வேண்டுமென்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில் மாதத் தொடக்கத்தில் வக்ர கதியிலும் இயங்கப் போகிறார். எனவே இம் மாதம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய மாதமாகும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திடீரெனப் பிரச்சினைகள் வந்து அலைமோதும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்குப் பணிநீக்கம் செய்யப்படும் அளவிற்குக் கூட பிரச்சினைகள் வரலாம். பொறுமையும், நிதானமும் அதிகம் தேவைப்படும் மாதம் இது.

    சனி வக்ரம்

    ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடல்நிலையில் அடிக்கடி தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். பொருளாதாரப் பிரச்சினை அதிகரிக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கரங்களில் புரளும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் மாற்றம் மனக் கலக்கத்தை உருவாக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். உறவினர் பகையும், உடன்பிறந்தோர் பகையும் உருவாகும் நேரம் இது. சில காரியங்கள் கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். மனக்குழப்பம் அகலவும், தடைகள் விலகவும் சனிக் கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது.

    கடக - புதன்

    ஆனி 12-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்திற்கு வரும் புதனால் நன்மைகள் ஏற்படும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். உத்தியோக முயற்சி கைகூடும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் அகலும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடமான 6-ம் இடத்திற்கு அதிபதியாக புதன் விளங்குவதால், கடன்சுமை குறைய வழிபிறக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    கடக - சுக்ரன்

    ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ல் சஞ்சரிக்கும்போது, பிள்ளைகள் வழியில் சில பிரச்சினைகள் வந்து அலைமோதும். மன அமைதிக் குறைவு ஏற்படும். எதிலும் தீர்க்கமாக முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்காமல் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள இயலாமல் போகலாம்.

    ரிஷப - செவ்வாய்

    ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஒரு பொன்னான நேரமாகும். நினைத்தது நிறைவேறும் விதத்தில் 'குரு மங்கள யோகம்' ஏற் படுகிறது. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். கடன்சுமை பாதிக்குமேல் குறையும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும், ஆதாயம் குறைவாகவே இருக்கும். மாணவ - மாணவிகள் அக்கறையோடு படித்தால் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு தொழிலில் குறுக்கீடுகளும், வருமானக் குறைவும் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூன்: 15, 16, 19, 20, 27, 28, ஜூலை: 12, 13, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    மகரம்

    வைகாசி மாத ராசிபலன்

    வைகாசி மாதத் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. தொகை வரவு திருப்தி தரும். தாமதப்பட்ட சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். சேமிப்பு உயரும். செல்வ நிலை திருப்தி தரும். வீடு, இடம் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள்.

    ரிஷப - சுக்ரன்

    வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, புனித பயணங்கள் அதிகரிக்கும். போராட்ட நிலை மாறும். புகழ்மிக்க ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருவீர்கள். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பெண் வழி பிரச்சினைகள் அகலும். பூர்வீகச் சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உருவாகும்.

    ரிஷப - புதன்

    வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அவர்களின் மேல் படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளும் பலன் தரும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு, பெற்றோர் உறுதுணையாக இருப்பர். கொடுத்த கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு களைப் பெறுவீர்கள். இடமாற்றம் மற்றும் இலாகா மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.

    மேஷ - செவ்வாய்

    வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு சுகாதிபதி செவ்வாய், சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். லாபாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால், தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்பனையாகி நல்ல ஆதாயம் கிடைக்கும். நடக்கும் தொழிலை விரிவு படுத்த நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர்.

    மிதுன - புதன்

    வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான புதன், அந்த இடத்திற்கே செல்வதால் உத்தியோகத்தில் நற்பலன்கள் கிடைக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டு. திடீர் வரவு வந்து கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். வியாபாரத்தில் வி.ஐ.பி.க்கள் வாடிக்கையாளர்களாக வருவர். புதன் 9-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குவதால், கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தந்தை வழி ஆதரவு உண்டு.

    மிதுன - சுக்ரன்

    வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் பெருமை உண்டு. 'படித்து முடித்தும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது அந்தக் கவலை அகலும். 'வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும்' என்று விரும்பியவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக் கவனம் செலுத்துவீர்கள்.

    மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மனத்திற்கு இதமான செய்தி வரும். வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வரலாம். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. சுய தொழில் செய்யும் பெண்களுக்கு யோகமும், வருமானமும் பெருகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 18, 19, 23, 24, 25, 30, 31, ஜூன்: 3, 4.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    மகரம்

    பங்குனி மாத ராசிபலன்

    வரவை அறிந்து செலவு செய்ய வேண்டும் என்று கூறும் மகர ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் சுக்ரன் மற்றும் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. தொகை வரவு திருப்தி தரும். பாதச் சனியின் ஆதிக்கத்தால் பலன் அதிகம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு உயர் நிலையை அடைய வழிபிறக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட் களையும் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    செவ்வாய் - சனி சேர்க்கை

    மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்குள்ள சனியோடு மாதம் முழுவதும் இணைந்து சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். சுக ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், தன ஸ்தானத்தில் இருப்பது யோகம்தான். இருந்தாலும் பகை கிரகமான சனியோடு இணைந்திருப்பதால் குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். சொத்துத் தகராறுகளும், சொந்த பந்தங்களால் வாக்குவாதங்களும் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் கூடும். வருமானம் ஒருபுறம் வந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உங்களை நம்பி ஒப்படைத்த முக்கிய பொறுப்புகளை, மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். சனி - செவ்வாய் வழிபாடு தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும்.

    புதன் வக்ரம்

    மீன ராசியில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், பங்குனி 13-ந் தேதி வக்ரமும் அடைகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். 6-ம் இடத்திற்கு அதிபதியான அவர், 3-ம் இடத்தில் வலிமை இழப்பது யோகம்தான். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். வள்ளல் களின் ஒத்துழைப்பும், வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் இதுவரை தடைப்பட்ட பதவி உயர்வு இப்பொழுது தானாக வந்துசேரும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். அதே நேரம் 9-ம் இடத்திற்கு அதிபதியாகவும் புதன் விளங்குவதால், பாகப்பிரிவினைகள் முடிவாவதில் தாமதம் ஏற்படும். தந்தை வழி உறவிலும் விரிசல் உண்டு.

    மீனம் - சுக்ரன்

    பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தன்னுடைய உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உச்சம்பெறுவது யோகம்தான். பிள்ளைகளால் பெருமை வந்துசேரும். அவர்கள் படிப்பிற்கேற்ற வேலை கிடைத்து சம்பாதிக்கத் தொடங்குவர். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. சொந்தங்கள் பாராட்டும் விதத்தில் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகளை மேலதிகாரிகள் கொடுப்பர்.

    பொதுவாழ்வு மற்றும் அரசியலில் உள்ளவர்களுக்கு, நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களால், புதியவர்களை நம்பி செயல்பட இயலாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். தீவிர முயற்சியால் கலைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பொருளாதாரம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 14, 15, 26, 27, 29, 30, 31, ஏப்ரல்: 6, 7, 11, 12.

    மகிழச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    மகரம்

    மாசிமாத ராசிபலன்

    வாழ்வில் உழைத்து முன்னேறத் துடிக்கும் மகர ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, தன ஸ்தானத்தில் வலுப்பெற்றிருக்கிறார். எனவே பொருளாதார நிலை திருப்தியாகவே இருக்கும். கடந்த சில மாதங்களாக தாமதப்பட்ட காரியங்கள் இப்பொழுது தடையின்றி நடைபெறும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். இருப்பினும் ஏழரைச்சனி இன்னும் முடிவடையவில்லை. பாதச்சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் தொழில், உத்தியோகம், குடும்ப உறவு போன்றவற்றில் கூடுதல் கவனம் தேவை. புதியவர்களை நம்பி செயல்படுவதால் சில பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.

    கும்பம் - புதன்

    மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். நண்பர்கள் நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக முடியும். நாடு மாற்றம் செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் யோசித்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்தாலும் அதற்கேற்ப ஊதியமும் வழங்குவார்கள்.

    மகரம் - சுக்ரன்

    மாதத் தொடக்க நாளிலேயே, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம் தான். பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகள் கைகூடும். இடம், பூமி சேர்க்கை உண்டு. மங்கல ஓசை மனையில் கேட்கும் சூழ்நிலை உருவாகும்.

    மீனம் - புதன்

    மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். 6-ம் இடத்திற்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவது யோகம்தான். கடன் சுமை குறையும், கவலைகள் தீரும். இட மாற்றம் இனிமை தரும். சாதாரண சிகிச்சையிலேயே நோய்கள் குணமாகும். பகையான உறவினர்கள் உறவாக மாறுவர். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். கடமையில் கண்ணும் கருத்துமாக விளங்குவீர்கள். புதன் 9-ம் இடத்திற்கும் அதிபதியாக இருப்பதால் பெற்றோரிடம் பிரச்சினை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    கும்பம் - சுக்ரன்

    மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன். தன ஸ்தானத்திற்கு வருவது யோகம் தான். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும். வளர்ச்சி கூடும். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். திடீர் திருப்பங்கள் பலவும் வந்து கொண்டே இருக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைத்து மகிழ்வீர்கள்.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு ஆதாயம் தரும் தகவல்கள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு மாதத்தின் பிற்பாதியில் வளர்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிட்டும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்பங்கள் இல்லம் தேடி வரும். மாணவ, மாணவியர் எதிர்பார்த்த இலக்கை அடைவர். பெண்கள், உடன் பிறப்புகள் மற்றும் உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.

    பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 15, 16, 26, 27,

    மார்ச்: 2, 3, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

    மகரம்

    தை மாத ராசிபலன்

    அச்சத்தை தவிர்த்தால் உச்சம் எட்டலாம் என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். தனாதிபதியாகவும் சனி இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மனக்கவலைகள் மாறும். சுபச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு சக்திகள் அகலும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள். அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு அகலும்.

    மேஷ-குருவின் சஞ்சாரம்!

    மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். இதை அர்த்தாஷ்டம குரு என்று சொல்வது வழக்கம். குடும்பச்சுமை கொஞ்சம் கூடும். கொடுக்கல்- வாங்கல்களில் ஒருசில தடைகள் ஏற்பட்டு அகலும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலத் தொல்லைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளும் உருவாகும். குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கே பலன் அதிகம் என்பதால் குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதியும் இந்த நேரத்தில் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழலாம். இருப்பினும் கவலைப்பட வேண்டாம். தைரியமும், தன்னம்பிக்கையும் கைகொடுக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களால் சில பிரச்சினைகள் உருவாகலாம்.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். ஜென்ம ராசிக்கு புதன் வருகின்ற பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. பாதியில் நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்த உங்களுக்கு இப்பொழுது பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மகர-செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். லாபாதிபதி செவ்வாய் உங்கள் ராசிக்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சி கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட காரியங்களை செய்ய நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டு புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு கேட்ட சலுகைகளை உயர் அதிகாரிகள் வழங்குவர். கலைஞர்களுக்கு வருமானம் உயரும். மாணவ-மாணவியர்கள் அதிக ஈடுபாட்டுடன் படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதைச் சமாளித்து விடுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 15, 16, 19, 20, 31, பிப்ரவரி: 1, 3, 4, 5, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    மகரம்

    மார்கழி மாத ராசிபலன்

    மற்றவர்களின் மனதை ஈர்க்கும் விதத்தில் பேசும் மகர ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சுக்ரன் துலாத்தில் சொந்த வீட்டிலும், லாபாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சொந்த வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். 3 கிரகங்கள் பலம் பெற்று சஞ்சரிப்பதால் முன்னேற்றம் கூடும். தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மேலும் இம்மாதம் ஏழரைச் சனியில் ஜென்மச்சனி விலகி குடும்பச்சனியாக மாற இருக்கிறது. 2-ல் சனி வரும் இம்மாதம் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

    கும்ப ராசியில் சனி

    மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான், மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்கு செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி ஏழரைச்சனியில் ஜென்மச்சனி விலகும் விதத்தில் அமைவதால் ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் விதத்தில் தொழில் அமையும். ஆயினும் இப்பொழுது குடும்பச் சனி நடைபெறப் போகிறது. இது கடந்த காலங்களைப்போல நிம்மதி குறைவை உருவாக்காது. போகப்போக நன்மைகளையே வழங்கும். குறிப்பாக குடும்ப உறவு பலப்படும். உத்தியோகத்தில் பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும்.

    விருச்சிக-சுக்ரன்

    மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். செல்வநிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்கள் வந்து சேரும். கல்யாண முயற்சிகள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும்.

    தனுசு-செவ்வாய்

    தனுசு ராசிக்கு மார்கழி 11-ந் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகி செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் சொத்துக்கள் விரயமாகலாம். என்றைக்கோ குறைந்த விலையில் வாங்கிப்போட்ட சொத்து, இப்போது அதிக விலைக்கு விற்கலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

    அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    தனுசு-புதன்

    மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ல் சஞ்சரிக்கும் பொழுது விபரீத ராஜயோகம் அடிப்படையில் சில நல்ல பலன்கள் நடைபெறும். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம். விரயங்கள் ஏற்படும் நேரமிது. அதே சமயம் திடீர் தனவரவும் உண்டு. பங்குச்சந்தையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டு குவியும்.

    மாணவ-மாணவியர்களுக்கு திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். பெண்களுக்கு இட மாற்றம், வீடு மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும்.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 18, 19, 22, 23,

    ஜனவரி: 4, 5, 7, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    மகரம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    எதிர்கால சிந்தனையில் மூழ்கி இருக்கும் மகர ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகி பலம் பெற்று சஞ்சரிக்கின்றார். எனவே உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கடன் சுமை குறையும். கவலைகள் அகலும். திடமான நம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். வாங்கல் கொடுக்கல்கள் சீராகும். வளர்ச்சி அதிகரிப்பின் காரணமாக இதைச் செய்வோமா, அதை செய்வோமா என்று சிந்திப்பீர்கள். அர்த்தாஷ்டம குரு ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதுமே குரு பகவான் மேஷ ராசியில் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

    சகோதர ஒற்றுமை குறையும். பாகப்பிரிவினைகள் பாதியிலேயே நிற்கும். பயணங்கள் மகிழ்ச்சியைக் கொடுக்குமே தவிர ஆதாயத்தைக்கொடுக்காது. உடல் உபாதைகளைச் சந்திக்க நேரிடும். இதுபோன்ற நேரங்களில் வியாழன் விரதமும், குரு கவசமும் பாடி குருவை வழிபடுவது நல்லது.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். எனவே பிள்ளைகளாலும், தொழில் ரீதியாகவும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். தொழில் பங்குதாரர்கள் தொழிலைப் பிரித்துக்கொள்ள நினைப்பர். ஆயினும் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வந்த பின்னால் எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலும். நிலைமை சீராகும். தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர். வாகனம் வாங்கும் முயற்சி கை கூடும்.

    தனுசு-புதன்

    உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் கார்த்திகை 14-ம் தேதி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்துமுடிக்க இயலும். கடன் சுமை குறையும். அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர் களுக்கு அது கைகூடும். ஆன்மிகப் பயணங்களால் புகழ் பெற்ற ஆலயங்களில் வழிபட்டு வருவீர்கள். பெற்றோர்களின் மணி விழா, முத்து விழா போன்ற விழாக்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பு உண்டு.

    ×