search icon
என் மலர்tooltip icon

    மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.3.2023 முதல் 13.4.23 வரை

    அன்பு ஒன்றே மூலதனம் என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் சொல்ல முடியாத அளவிற்கு துயரங்களைச் சந்தித்து இருக்கலாம். பங்குனி 14-ந் தேதி வரை ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருக்கின்றது. ஏனெனில் இடையில் 6 மாதம் சனி பகவான் கும்ப ராசிக்கு சென்று மீண்டும் மகரத்திற்குத் திரும்புகிறார். அவர் கும்பத்தில் இருக்கும் 6 மாதமும் பெரியளவில் பாதிப்புகளைத் தரமாட்டார்.

    இருப்பினும் மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் கொஞ்சம் விழிப்புணர்வு தேவை. மந்தன் எனப்படும் சனி மந்த கதியில் இயங்குவார் என்பார்கள். எனவே பல காரியங்கள் துரித கதியில் நடைபெறாமல் மந்த கதியிலேயே நடைபெறும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அமைதி கிடைக்க அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதே நல்லது.

    மேஷ - புதன்

    பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான புதன், சுக ஸ்தானத்திற்கு செல்கிறார். இக்காலம் இதயத்தை மகிழ்விக்கும் காலமாகும். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நடைபெறும். உறவினர்கள் உற்ற துணையாக விளங்குவர். வரவு அதிகரிக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வீடு வாங்கும் யோகம் உண்டு. விருப்பம் போல வீட்டைப் பழுது பார்க்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். கையில் இருந்த பணம் கரைந்தாலும் பையில் பணம் இருந்து கொண்டேஇருக்கும் விதத்தில் புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். தூரத்து ஊர்களுக்கு மாற்றலாகிச் சென்று துணிந்து பணிபுரிய முற்படுவீர்கள்.

    ரிஷப - சுக்ரன்

    பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கே செல்வதால் அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். அதிகச் செலவில்லாமலேயே சில காரியங்கள் முடிவடைதல், ஆதாயம் தரும் தகவல்களை அன்றாடம் கேட்டல் போன்றவை நடைபெறும் நேரமிது. பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட சோதனைகள் மாறும். மேலிடத்து ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழிலில் உள்ளவர்கள், நவீன யுக்திகளைப் பயன்படுத்தி முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்வீர்கள். பணியாளர் மாற்றம் பலன் தரும். கலைஞர்களுக்கு இடையூறுகள் அகன்று இனிய பலன் கிடைக்கும். மாணவ - மாணவிகள், தங்களின் பெற்றோர், ஆசிரியர் சொற்கேட்டு நடப்பதன் மூலம் கற்ற கல்வியால் பெருமை சேரும். பெண்கள் பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டிய நேரம் இது. சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும். இல்லறம் நல்லறமாக, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

    இம்மாதம் சனீஸ்வரர் வழிபாடு சந்தோஷத்தை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 20, 21, 24, 25, ஏப்ரல்: 4, 5, 6, 9, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்நீலம்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    13.2.2023 முதல் 14.3.2023 வரை

    முயன்றால் முடியாதது இல்லை என்று எடுத்துரைக்கும் மகர ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி புதனுடன் கூடி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். வெற்றிகள் ஸ்தானத்தில் குரு வீற்றிருக்கிறார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே வரவு வருவதற்கு முன்னரே செலவு காத்திருக்கும். அஷ்டமாதிபதி சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். எனவே கவன மாக செயல்படுங் கள்.

    உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் அடிக்கடி ஆரோக்கியத்தில் தொல்லை உண்டாகும். மருத் துவச் செலவு கூடும். ஜென்மச் சனியின் ஆதிக்கத்தால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. சகாய ஸ்தானத்தில் இருக்கும் குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி விடும். சனியின் பலத்தால் காரியத்தடை ஏற்படாமல் இருக்க அதற்குரிய பிரத்யேக வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

    உச்ச சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது யோகம்தான். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அவர்களின் கல்வி மேற்படிப்பு, உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் ஏதேனும் முயற்சி செய்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகளில் சாதகமான சூழல் அமையும்.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நன்மையைத்தரும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் கேட்ட சலுகைகள் கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். முன்னோர்கள் கட்டி வைத்து சிதிலமடைந்த கோவில்களை சீரமைக்கும் வாய்ப்பு சிலருக்கு வாய்க்கும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். 6-க்கு அதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான். 'படித்து முடித்தும் வேலையில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரலாம். மனக்குழப்பம் அகல நண்பர்கள் வழிகாட்டுவர்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 29-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்ரன், 4-ம் இடத்திற்கு வரும்பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வங்கிகளின் ஒத்துழைப்பு, வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைத்து தொழிலை வளப்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி கைகூடும். பணியாளர்களின் தொல்லை அகலும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். இடமாற்றம் மகிழ்ச்சி தரும்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அங்கிருந்து கொண்டு மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கப் போகிறார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகள் வந்து அலைமோதும். வீண் விரயம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது. ஆரோக்கிய தொல்லையும், வைத்தியச் செலவும் ஏற்படும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பணி நீக்கம் செய்யப்படும் அளவிற்குகூட பிரச்சினைகள் வரலாம்.

    இம்மாதம் கண்ணன் வழிபாடு கவலையைப் போக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 13, 14, 21, 22, 25, 26, மார்ச்: 8, 9, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    16.12.22 முதல் 14.1.23 வரை

    மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வீற்றிருக்கிறார். விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன் ஆகிய 3 கிரகங்களும் இருக்கின்றன. சுகாதிபதி செவ்வாய் வக்ரம் பெற்றிருக்கிறார். எனவே திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லாமல் இருக்க வழிபாடுகள் தேவை.

    புதன் வக்ர இயக்கம்

    உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். 6-க்கு அதிபதி 12-ம் இடத்தில் வக்ரம் பெறுவது நன்மைதான். விபரீத ராஜயோக அடிப்படையில் திடீர் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்பால் இதயத்தில் மகிழ்ச்சி கூடும். அதே நேரத்தில் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் புதன் விளங்குவதால் சொந்தங்களாலும், சொத்துக்களாலும் சில பிரச்சினை தலைதூக்கும். சொத்துத் தகராறுகளால் சொந்தங்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடும்.

    மகர - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் அகலும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர். கேட்ட சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். படித்து முடித்த பிள்ளைகளின் வேலைக்காகச் செய்த முயற்சி கைகூடும்.

    புதன் வக்ர நிவர்த்தி

    மார்கழி 24-ந் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உறவினர் பகை அகலும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினை அகலும். 'வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படுகின்றதே, புதிய வாகனம் வாங்கலாமா?' என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மார்கழி 29-ந் தேதி ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வக்ர நிவர்த்தியாவது மிகுந்த யோகம்தான். வருமானப் பற்றாக்குறை அகலும். வாய்ப்புகள் வாசல் தேடி வரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் மும்முரம் காட்டுவீர்கள். வர்த்தகம் சார்ந்த துறைகளில் நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும். கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் வந்து சேரலாம். தடைப்பட்ட காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.

    லாபாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கும், மேல் முதலீடு செய்ய நினைத்தவர்களுக்கும், வங்கிகளின் உதவி கிடைக்கும். தங்கு, தடைகள் அகலும். இந்த நேரத்தில் சம்பள உயர்வுடன் கூடிய உத்தியோக வாய்ப்புகள் தேடி வரலாம். இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும்.

    இம்மாதம் தினந்தோறும் கணபதி வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 21, 22, 28, 29, ஜனவரி: 1, 2, 13, 14. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    மகரம்

    இந்த வார ராசிப்பலன்

    17.11.21 முதல் 15.12.21 வரை

    மற்றவர்களைப் பார்த்த மாத்திரத்தில் எடை போடும் மகர ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. விரயாதிபதி குரு தன ஸ்தானத்தில் இருக்கின்றார். உங்கள் ராசியிலுள்ள சனியைச் செவ்வாய் பார்ப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும் மாதமாகும். விரயங்கள் கூடுதலாக இருக்கும்.

    செவ்வாய்-சனி பார்வைக் காலம்

    மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை 20-ந் தேதி வரை செவ்வாய்-சனியின் பார்வை இருக்கின்றது. இக்காலத்தில் மிகமிக கவனத்தோடு செயல்பட வேண்டும். குறிப்பாக உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பகை கிரகமாக இருக்கும் அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் பிரச்சினைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கியத் தொல்லைகள் வரலாம். பணிபுரியும் இடத்திலும் வேலைப்பளு அதிகரிக்கும்.

    விருச்சிக புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 6, 9 க்கு அதிபதியான புதன் 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது 'புத-ஆதித்ய யோகம்' உருவாகின்றது. எனவே அரசு வழியில் அனுகூலங்கள் கிடைக்கும். என்றாலும், ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் அது கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெறலாம். சேமிப்புகள் கரையும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும்.

    தனுசு புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு சேர்ந்து புத-சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன் ஆவார். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது அங்குள்ள சுக்ரனோடு இணைவதால் பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை பார்த்த பிள்ளைகள் வேலையை விட்டு விலகும் சூழ்நிலை கூட உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காது.

    மகர சுக்ரனின் சஞ்சாரம்

    கார்த்திகை 19-ந் தேதி மகர ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்குச் சுக்ரன் வரும் நேரம் நல்ல நேரமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது உங்களுக்கு வரவேண்டிய யோகங்கள் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பிள்ளை களின் வெளிநாட்டு முயற்சிக்கு ஆதரவு கொடுப்பீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

    விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்!

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஓர் அற்புதமான நேரமாகும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். தகராறுகள் தானாக விலகும். வெளிநாட்டிலிருந்து உறவினர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கலாம். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். சனி பகவான் வழிபாடு சந்தோஷத்தை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 17, 18, 30, டிசம்பர்: 1, 3, 4, 5, 10, 11.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    முயற்சி அனைத்தையும் முடித்துக் காட்டும் மகர ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகி பலம்பெற்று சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இருப்பினும் செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் தோன்றும்.

    துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானம் என்னும் 10-ம் இடத்திற்கு ஐப்பசி 2-ந் தேதி செல்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானப் பற்றாக்குறை அகன்று, வசதி வாய்ப்புகள் பெருகும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்கும் சூழ்நிலை உருவாகும். பெண் பிள்ளைகளின் திருமணம் சிறப்பாக நடைபெற வழிபிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும்.

    துலாம் - புதன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். 6-க்கு அதிபதி 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் உண்டு. சில காரியங்களை உடனுக்குடன் முடித்துக் காட்டுவீர்கள். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும், சலுகைகளும் கிடைக்கும்.

    மிதுன - செவ்வாய் வக்ரம்

    ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். அதுமட்டுமின்றி செவ்வாயின் பார்வையும் மகரத்தில் உள்ள சனி மீது பதிகிறது. எனவே அதிக கவனம் தேவைப்படும் நேரம் இது. நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். உடன்பிறப்புகளும் உடன் இருப்பவர்களும் உதவி செய்வதாகச் சொல்லி, கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.

    விருச்சிக - புதன் சஞ்சாரம்

    ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வரலாம். ஆயினும் ஏழரைச் சனியும், ஜென்மச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுவதால் எதையும் ஏற்றுக் கொள்ள இயலாமல் இடையூறுகள் வந்து சேரும். சனிக்குரிய பரிகாரம் செய்வது நல்லது.

    விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

    ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் ெசல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். குறிப்பாக தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறும் நேரம் இது.

    குரு வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகி, பலம் பெறுகிறார். வெற்றிகள் ஸ்தானம் பலம்பெறும் போது, உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பார்த்தபடி தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு தற்காலிகப் பணி, நிரந்தரமாக மாறும். தடைகள் அகலும். உடன்பிறப்புகளின் ஆதரவு கூடுதலாக இருக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 24, 25, 28, 29, நவம்பர்: 2, 3, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    18.9.22 முதல் 17.10.22 வரை

    எதையும் ஆராய்ந்து அறிந்து அதற்கேற்ப சிறப்பாக செயல்படும் மகர ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அஷ்டமத்தில் புதனும், சுக்ரனும் இருக்கிறார்கள். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

    கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

    புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மீது வக்ர குருவின் பார்வை பதிவதால் இக்காலத்தில் சில நற்பலன்களும் நடைபெறும். திடீர், திடீர் என வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்க முற்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களை பங்கீடு செய்வதில் குழப்பங்கள் ஏற்படும்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் உச்சம் பெறுவது யோகம்தான். பாக்கிய ஸ்தானம் பலமடைகிறது. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய இயலும். உத்தியோகத்தில் திறமைக் குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். கடன் சுமை குறைய வழிபிறக்கும். தொழிலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை கேட்டும் கிடைக்காத ஊதிய உயர்வு இப்பொழுது தானாக வந்து சேரும்.

    மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் உறவினர்களிடையே பகை உருவாகலாம். உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் வைத்துப் பேசுபவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடை அகலும். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. ஊர்மாற்றம், இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    சனி வக்ர நிவர்த்தி

    புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய பலன்களைக் கொடுக்கும். குறிப்பாக ஜென்மச் சனி வக்ர நிவர்த்தியாவதால் ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவு குறையும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களிலும் ஆதாயம் உண்டு.

    இம்மாதம் நரசிம்மர் வழிபாடு நன்மைகளை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 26, 27, 30, அக்டோபர்: 1, 2, 7, 8, 11, 12.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உடல்நிலையிலும் சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். குருவும் வக்ர இயக்கத்தில் இருப்பதால் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையும். பணிபுரியும் பெண்கள் பாராட்டு மழையில் நனைவர்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.8.2022 முதல் 17.9.2022 வரை

    உழைப்பின் மூலமே உன்னத வாழ்வு அமையும் என்று கூறும் மகர ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சகாய ஸ்தானாதிபதி குருவும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    சிம்ம - சூரியன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன், 8-ம் இடத்திலேயே மாதம் முழுவதும் சஞ்சரிக்கிறார். எனவே சில இழப்புகளும், விரயங்களும் ஏற்படத்தான் செய்யும். மாற்றங்கள் மனதிற்கு இனியவிதம் அமையுமா என்பது சந்தேகம். உறவினர் பகை உருவாகும். கொடுக்கல்- வாங்கல்கள் பிரச்சினையாகும்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    ஆவணி 8-ந் தேதி, கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 9-ம் இடத்தில் உச்சம் பெறுவதால் பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகல புதிய முயற்சி களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    வக்ர புதன் சஞ்சாரம்

    ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் 6-க்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுகிறார். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். எதிர்பாராத நற்பலன்கள் உங்களுக்கு வரலாம். அதே நேரம் 9-க்கு அதிபதியாகவும் புதன் விளங்குவதால், தந்தை வழி உறவில் சில பிரச்சினைகள் உருவாகும்.

    சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

    ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமாதிபதி சூரியனோடு இணையும் போது சுபகாரியங்கள் நடைபெறும். தொழிலை விரிவு செய்யும் முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். வீடுகட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். பாகப்பிரிவினையில் உங்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.

    குரு வக்ரமும், சனி வக்ரமும்

    மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ரமாக இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு அதிபதியான குரு வக்ர இயக்கத்தில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. அவர் சகாய ஸ்தானாதிபதி என்பதால், பல நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். சனி வக்ரம் பெறுவதால் சஞ்சலங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை உண்டு. பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் ஏற்படும்.

    இந்த மாதம் வரும் அஷ்டமி தினங்களில் பைரவரை வழிபாடு செய்து வந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 29, 30, செப்டம்பர்: 2, 3, 4, 10, 11, 14, 15

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தாநீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறுவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரணையாக செல்வதன் மூலம்தான் குடும்பத்தில் அமைதி நிலவும். வீண் விரயங்கள் அகல சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17-07-2022 முதல் 16-08-2022 வரை

    எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்தும் மகர ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லலாம். ஜென்மச் சனி நடைபெறுவதால் எதிலும் கூடுதல் கவனம் தேவை.

    ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். இருப்பினும் சனி வக்ர இயக்கத்தில் உள்ளதால், வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் சேமிக்க இயலாது. வீண் விரயங்களும், சுபவிரயங்களும் மாறி மாறி வரும். புதன் 9-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குவதால் பூர்வீக சொத்து சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். பயணங்கள் பலன் தரும்.

    ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்போது நன்மை உண்டாகும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நேரம் இது.

    ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். சகோதர, சகாய ஸ்தானாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் குரு பகவான் வக்ர இயக்கத்தில் செயல்படும்போது, சகோதரர் களால் பிரச்சினைகள் உருவாகலாம். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். குரு பகவான் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. உத்தியோகத்தில் நிரந்தரப் பணி அமையும். 12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால் விரயாதிபதி குரு வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். பயணங்கள் பலன் தரும். வீடு மாற்றம், இடமாற்றம் விரும்பும் விதத்தில் அமையும். ஜென்மச் சனி வக்ரம் பெற்றுள்ளதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள்.

    ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து வளர்ச்சிக்கு வழிவகுத்துக் கொடுப்பர். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை செய்யுங்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூலை: 17, 18, 21, 22, ஆகஸ்டு: 2, 3, 6, 7, 8, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் சனியின் வக்ரத்தாலும், சுக ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. குடும்பச்சுமை கூடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பணிபுரியும் பெண்களுக்கு சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு பெரும் முயற்சி எடுக்கும் சூழல் உருவாகும்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை

    யாரைப் பார்த்தால் காரியத்தை முடிக்க முடியும் என்று அறிந்த மகர ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சுகாதிபதி செவ்வாயை, சனி பார்க்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும்.

    ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பலம்பெறும் பொழுது ஓரளவு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக செய்தொழிலில் போதுமான வருமானம் கிடைக்கும். ஜென்மச் சனி வக்ரம் பெற்றிருப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திடீரென மாற்றங்கள் உருவாகும். உறவினர்களின் யோசனை மனக்குழப்பத்தை ஏற்படுத்தும்.

    ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். 6-க்கு அதிபதி புதன் 6-ல் வலுவடையும் இந்த நேரம் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது. எதிரிகளின் பலம் கொஞ்சம் மேலோங்கியிருக்கும். உடல்நலத்திலும் மீண்டும் பழைய தொல்லை தலைதூக்கும். எதையும் யோசித்துச் செய்வது மட்டுமல்லாமல், அருளாளர்கள் மற்றும் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளையும் கேட்டு செயல்பட்டால்தான் வெற்றிபெற முடியும்.

    ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் சுக ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே வளர்ச்சி கூடும். வருமானம் திருப்தி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பத்திரப்பதிவில் இருந்த தடை அகலும். சொத்து விற்பனை லாபம் தரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை விலக்குவீர்கள். உத்தியோகத்தில் மேலிடத்தின் சலுகைகள் கிடைக்கும்.

    ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலைக் கொடுப்பர். எதிர் காலத்திற்காக சேமிக்க முன்வருவீர்கள்.

    ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். பஞ்சமாதிபதி 6-ல் வரும் இந்த நேரம் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்துசேரும். நகைகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள். உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பர். மனக்குழப்பம் அகலும். வியாபாரத்தில் பற்று, வரவு கணிசமாக உயரும். 'கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறவில்லையே' என்ற கவலை அகலும்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 20, 21, 24, 25, ஜூலை: 7, 8, 10, 11 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் ஜென்மச் சனி வக்ரம் பெற்றிருப்பதாலும், 10-ல் கேது இருப்பதாலும் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். உறவினர் பகை உருவாகும். கணவன் -மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படலாம். பணி நிரந்தரமாவதில் தாமதம் ஏற்படும்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் மகர ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் செவ்வாயும், சகாய ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த காரியம் தாமதப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். இக்காலத்தில் மருத்துவச் செலவு கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. தடைகளும், மனப் போராட்டமும் அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.

    புதனின் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு இனிய காலம்தான். உத்தியோக மாற்றம் உருவாகலாம். மணவாழ்வில் இருந்த கருத்து வேறுபாடு அகலும். தனவரவிற்கு குறைவிருக்காது. வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். 6, 9-க்கு அதிபதி புதன் 5-ம் இடத்திற்குச் செல்லும் இந்த நேரத்தில் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். புதிய வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்வீர்கள். நீண்ட நாளைய சச்சரவுகள் மாறும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலம்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம்பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். தடைகளை வென்று முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் ஏற்படலாம். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி, பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 23, 24, 28, 29, ஜூன்: 9, 10, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. பணப்புழக்கம்நன்றாக இருந்தாலும் மனக்குழப்பமும் அதிகரிக்கும். கணவன் - மனைவி உறவில் பாசமும் நேசமும் குறையும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. சகப் பணியாளர்களால் திடீர், திடீரெனப் பிரச்சனைகள் உருவாகும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

    மகரம்

    ஆங்கில ஆண்டு பலன் - 2022

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் மகர ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் செவ்வாயும், சகாய ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த காரியம் தாமதப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். இக்காலத்தில் மருத்துவச் செலவு கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. தடைகளும், மனப் போராட்டமும் அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.

    புதனின் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு இனிய காலம்தான். உத்தியோக மாற்றம் உருவாகலாம். மணவாழ்வில் இருந்த கருத்து வேறுபாடு அகலும். தனவரவிற்கு குறைவிருக்காது. வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். 6, 9-க்கு அதிபதி புதன் 5-ம் இடத்திற்குச் செல்லும் இந்த நேரத்தில் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். புதிய வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்வீர்கள். நீண்ட நாளைய சச்சரவுகள் மாறும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலம்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம்பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். தடைகளை வென்று முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் ஏற்படலாம். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி, பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 23, 24, 28, 29, ஜூன்: 9, 10, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. பணப்புழக்கம்நன்றாக இருந்தாலும் மனக்குழப்பமும் அதிகரிக்கும். கணவன் - மனைவி உறவில் பாசமும் நேசமும் குறையும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. சகப் பணியாளர்களால் திடீர், திடீரெனப் பிரச்சனைகள் உருவாகும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

    மகரம்

    ஆங்கில ஆண்டு பலன் - 2022

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் மகர ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் செவ்வாயும், சகாய ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த காரியம் தாமதப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். இக்காலத்தில் மருத்துவச் செலவு கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. தடைகளும், மனப் போராட்டமும் அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.

    புதனின் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு இனிய காலம்தான். உத்தியோக மாற்றம் உருவாகலாம். மணவாழ்வில் இருந்த கருத்து வேறுபாடு அகலும். தனவரவிற்கு குறைவிருக்காது. வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். 6, 9-க்கு அதிபதி புதன் 5-ம் இடத்திற்குச் செல்லும் இந்த நேரத்தில் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். புதிய வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்வீர்கள். நீண்ட நாளைய சச்சரவுகள் மாறும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலம்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம்பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். தடைகளை வென்று முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் ஏற்படலாம். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி, பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 23, 24, 28, 29, ஜூன்: 9, 10, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. பணப்புழக்கம்நன்றாக இருந்தாலும் மனக்குழப்பமும் அதிகரிக்கும். கணவன் - மனைவி உறவில் பாசமும் நேசமும் குறையும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. சகப் பணியாளர்களால் திடீர், திடீரெனப் பிரச்சனைகள் உருவாகும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

    ×