29.1.2024 முதல் 4.2.2024 வரை
அமைதி நிறைந்த வாரம். குருவுடன் பரிவர்த்தனை பெற்ற ராசி அதிபதி செவ்வாய் தனாதிபதி சுக்ரனுடன் பாக்கிய ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் செயல்களில் திறமைகள் வெளிப்படும். தைரியத்துடன் செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு உண்டாகும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கும் வேலை இழந்தவர்களுக்கும் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். சிலர் புதிய தொழில் துவங்கலாம். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். ஸ்திர சொத்துக்கள் சேரும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட சங்கடம் தீரும். அழகு, ஆடம்பர பொருட்கள், பொன், பொருட்சேர்க்கை உண்டாகும்.தேக ஆரோக்கியத்தில் பொலிவு கூடும். மனதில் நிலவிய சங்கடங்கள் விலகும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினை விலகும். 4.2.2024 அன்று மணி 1.04 நள்ளிரவுக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பலதரபட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். செவ்வாய்க்கிழமை வாராகி அம்மனை வழிபட மகிழ்ச்சி கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406