22.4.2024 முதல் 28.4.2024 வரை
சுபகாரியங்கள் கைகூடும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனும் பாக்கியாதிபதி குருவும் ராசியில் சஞ்சரிப்பதால் திருமணம், பிள்ளைப்பேறு, உயர்கல்வி, வீடு, வாகன யோகம் என தடைபட்ட அனைத்து சுப காரியங்களும் கை கூடி வரும்.
மனோதைரியம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நோய், பிணி, மூப்பு உங்களை அண்டாது. வழக்குகளின் தீர்ப்புகள் சாதகமாகும். சிலருக்கு அரசின் இலவச வீடு மனை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள் தேடி வரும். சம்பள உயர்வு உண்டு.
வியாபாரிகளுக்கு விரயம் குறையும். வெளிநாட்டு வேலை, தொழில் முயற்சிகள் வெற்றி தரும். கிடைத்த வாய்ப்யை பயன்படுத்தக்கூடிய நல்ல நேரமாக இந்த வாரம் அமையும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். தம்பதிகள் ஒருமித்த கருத்துடன் வாழ்வார்கள். 25.4.2024 இரவு 8 மணி முதல் 28.4.2024 அன்று அதிகாலை 4.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் கடன் பெறுவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியத்தில் வெற்றி பெற பவுர்ணமியன்று பராசக்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406