4.3.2024 முதல் 10.3.2024 வரை
சுபமான அனுகூலம் உண்டாகும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரனுடன் இணைந்து ராசியில் உள்ள குருவை பார்ப்பதால் கம்பீரமான வசீகரமான தோற்றம் ஏற்படும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். குடும்ப சுமை குறையும். மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும். இருளடைந்த உங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒளிபிறக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும்.
லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகள் நடக்கும். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். சிலருக்கு பணிக்காலம் முடிந்த பிறகும் பதவி நீட்டிப்பு கிடைக்கும். உடல் உபாதைகள் அகலும். 4.3.2024 அன்று மாலை 4.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு வீண்செலவுகள், விரயங்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் அவசியம். சிவராத்திரியன்று மாதுளை சாறினால் சிவனை வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406