25.3.2024 முதல் 31.3.2024 வரை
மேன்மைகள் உண்டாகும் வாரம். இன்னும் ஒருமாதத்தில் அதாவது மே 1-ந் தேதியன்று குரு ராசியை விட்டு விலகுவதால் ஜென்ம குருவின் ஆதிக்கம் குறையும். வீண் விரயத்தால் ஏற்பட்ட மன சஞ்சலம் குறைந்து தன வரவிற்கான அறிகுறி தென்படும். விட்டதை பிடிப்பீர்கள். இழந்ததை மீட்பீர்கள்.வெற்றிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சுய ஜாதகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கும் வலிமை குருப் பார்வைக்கு உண்டு. எனவே குருவின் பார்வை கடாட்சத்தால் முடிக்க வேண்டிய பணிகளில் கவனம் செலுத்துங்கள் எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கடின உழைப்பு லாபத்தை ஈட்டித்தரும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணவரவால் குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். புத்திர பிராப்தம் உண்டாகும். 29.3.2024 பகல் 2.09 முதல் 31.3.2024 இரவு 10.56 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் வெளியூர் பய ணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். தினமும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவிட முன்னேற்றம் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406