ஆன்மிக களஞ்சியம்

தினசரி நிகழ்வுகள் - நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

Published On 2024-02-28 12:41 GMT   |   Update On 2024-02-28 12:41 GMT
  • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
  • பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

அதன் பிறகு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஆஞ்சநேயர் வடை மாலையுடன் காட்சி அளிப்பார்.

அதன்பிறகு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

முதலில் நல்லெண்ணை காப்பு செய்யப்படுகிறது. பிறகு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது.

பின்னர் சீயக்காய், பால், தயிர், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சொர்ண அபிஷேகம் ஆகிய அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.

ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி பழம், மாதுளம் பழம், திராட்சை பழம் ஆகியவற்றை கொண்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

அதன்பிறகு உச்சிகால பூஜை நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News