ஆன்மிக களஞ்சியம்

தீர்த்தம் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும்

Published On 2024-02-28 12:46 GMT   |   Update On 2024-02-28 12:46 GMT
  • நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஏறத்தாழ 136 ஏக்கர் பரப்பளவில் ஒரே கல்லினால் ஆன பெரிய மலை உள்ளது.
  • சாலக்கிராமம் என்பது விஷ்ணுவுக்கு உகந்த தெய்வீக கல் ஆகும்.

லட்சுமி கடாட்சம் அருளும் கமலாலய குளம்

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஏறத்தாழ 136 ஏக்கர் பரப்பளவில் ஒரே கல்லினால் ஆன பெரிய மலை உள்ளது.

இந்த மலையின் உயரம் 75 மீட்டர் (246 அடி) ஆகும்.

சுற்றிலும், கமலாலய குளம், ஜெட்டி குளம், திருப்பாகுளம் ஆகியவை உள்ளன.

கமலாலய குளம் புராண கால சிறப்புகளை உடையது.

ராமாயண காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து கொண்டு இலங்கைக்கு செல்லும் வழியில், நாமக்கல் வந்தார்.

அப்போது அவருக்கு, சாலக்கிராமம் கிடைக்க பெற்றார்.

சாலக்கிராமம் என்பது விஷ்ணுவுக்கு உகந்த தெய்வீக கல் ஆகும்.

அப்போது 'உனக்கு கிடைக்க பெற்றதை எந்த இடத்தில் வைக்கிறாயோ,

அந்த இடம் மலையாக மாறிவிடும்' என்ற அசரீரி வார்த்தை கேட்டது.

இந்த தலத்திற்கு ஆஞ்சநேயர் வந்தபோது, சந்தியாவந்தனம் செய்வதற்காக கமலாலய குளத்தில் இறங்கினார்.

அப்போது சாலக்கிராமத்தை எப்படி கீழே வைப்பது என்று யோசித்த போது, அங்கு மகாலட்சுமி தவம் செய்து கொண்டு இருப்பதை கண்டார்.

மகாலட்சுமியிடம் தான் தியானம் செய்யும் வரை சாலக்கிராமத்தை கீழே வைத்து விடாமல் கையிலேயே வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நேரம் அதிகமாகவே ஆஞ்சநேயர் மறந்து விட்டார் என நினைத்து மகாலட்சுமி சாலக்கிராமத்தை கீழே வைத்து விட்டார்.

சந்தியா வந்தனம் முடித்து வந்து பார்த்த போது தனக்கு முன்பு பெரிய மலை உருவாகி இருப்பதை ஆஞ்சநேயர் கண்டார் என்பதும், அந்த மலையே நாமகிரி மலை என்றும் இதன் தல வரலாறு கூறுகிறது.

மலை அடிவாரத்தில் மகாலட்சுமி வாசம் செய்யும் குளம்தான் கமலாலய குளம்.

கமலம் என்றல் தாமரை என பொருள். தாமரையில் அமர்ந்தபடி லட்சுமி அருள்பாலிக்கும் குளம் என்பதால் இதை கமலாலய குளம் என்கின்றனர்.

இந்த குளத்து தீர்த்தம் புண்ணியமிக்கது. லட்சுமி கடாட்சம் அருளக்கூடியது என்கின்றனர் ஆன்மீகவாதிகள்.

எனவே இந்த தீர்த்த குளத்து நீரை வீடுகளில் தெளித்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும் என்கிறார்கள்.

Tags:    

Similar News