ஆன்மிக களஞ்சியம்

ஐயப்பனுக்கும் பங்குனி உத்திரத்திற்கும் என்ன தொடர்பு?

Published On 2024-03-23 11:37 GMT   |   Update On 2024-03-23 11:37 GMT
  • ஆண்டு தோறும் இந்நாளில் சபரிமலையில் பக்தர்கள் ஐயப்பனுக்கு ருத்ராபிஷேகம் செய்து விசேஷ வழிபாடு செய்கிறார்கள்.
  • குறிப்பாக அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள்.

சபரிமலை ஐயப்பன் அவதரித்த தினம் பங்குனி உத்திரமாகும்.

ஆண்டு தோறும் இந்நாளில் சபரிமலையில் பக்தர்கள் ஐயப்பனுக்கு ருத்ராபிஷேகம் செய்து விசேஷ வழிபாடு செய்கிறார்கள்.

பலி விழாப் பாடல் செய் பங்குனி உத்திர நாள் ஒலி விழா என்ற திருஞான சம்பந்தர் பங்குனி உத்திரத்தை போற்றி பாடுகிறார்.

சில கோவில்களில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் திருத்தலங்களில், பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண உற்சமாகவும் கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள்.

விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள்.

Tags:    

Similar News