ஆன்மிக களஞ்சியம்

ஆகாய கங்கை வாசம் செய்யும் கோசலம் (கோமியம்)

Published On 2023-12-24 12:51 GMT   |   Update On 2023-12-24 12:51 GMT
  • கோசலத்தை வீட்டினுள்ளேயும் புறத்திலும் தெளித்தால் அவ்விடம் தூய்மை பெறுகிறது.
  • கோசலத்தால் கண்களை அடிக்கடி கழுவிக் கொள்வதால் கண்நோய் தோன்றாது.

கோசலத்தில் ஆகாய கங்கை வாசம் செய்கிறாள்.

சப்த மாதர்கள் வாசம் செய்யும் பசுவின் யோனி வழியாகப் பாய்ந்து வரும் கோசலம் சப்த மாதர்களின் அருளையும் பெற்றுத் தருகிறது.

வீடுகளில் விசேஷங்கள் நடைபெறும் போது தீட்டு நீக்கவும், வீட்டை, தூய்மை செய்யவும் கோசலம் பயன்படுகிறது.

கோசலத்தை வீட்டினுள்ளேயும் புறத்திலும் தெளித்தால் அவ்விடம் தூய்மை பெறுகிறது.

கோசலம் கிருமி நாசினியாகவும், அரிய மருந்தாகவும் பயன்படுகிறது.

கோசலத்தால் கண்களை அடிக்கடி கழுவிக் கொள்வதால் கண்நோய் தோன்றாது.

கோசலம் புற்று நோயைத் தீர்ப்பதில் ஓர் அருமருந்தாக விளங்குகிறது.

பிறரது தீய பார்வையால் (துர் திருஷ்டி) பாதிக்கப்பட்டவர்கள் கோசலத்தை உடல் முழுவதும் தேய்த்துக் கொண்டால் பிறரது தீய பார்வையின் தீய பலன்கள் மறைந்து விடும். வீடுகளில் கோசலத்தை, தெளிப்பதன் தாத்பரியமும் இதுவேயாகும்.

கடல் நீரில் குளிப்பது போலவே கோசலத்தில் நீராடலாம். கோசலத்தில் நீராடியபின் பிறகு நன்னீரில் நீராடிக் கொள்ளலாம்.

Tags:    

Similar News