செய்திகள்

திடீர் உடல்நலக்குறைவு- ஜி.கே.மணி ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2018-12-28 09:51 GMT   |   Update On 2018-12-28 09:51 GMT
கோவை வந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #gkmani

கோவை:

பா.ம.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கோவை சிங்காநல்லூரில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதற்காக ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நேற்று கோவை வந்தார். 

பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு காரில் சென்றார். அப்போது திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இருதயகோளாறு காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் தேறினார். இன்று அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #gkmani 

Tags:    

Similar News