செய்திகள்
கங்குலிக்கு ஸ்பெஷல் கிப்ட் அளித்த பார்சிலோனா கால்பந்து அணி
லா லிகாவின் தலைசிறந்த கால்பந்து அணியான பார்சிலோனாவிடம் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஸ்பெஷல் கிப்ட் ஒன்றை பெற்றுள்ளார். #Barcelona #Ganguly
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர் ரசிகர்களால் ‘தாதா’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். சவுரவ் கங்குலி கிரிக்கெட் விளையாட்டுடன் கால்பந்தையும் அதிக அளவில் நேசிப்பவர். சிறுவயதில் கால்பந்து மீதுதான் அதிக நாட்டம் கொண்டிருந்தார். பின்னர்தான் கிரிக்கெட் வீரராக மாறினார்.
இவரை ஸ்பெயின் நாட்டின் லா லிகா தொடரில் விளையாடும் முன்னணி அணியான பார்சிலோனா அழைத்து, அந்த அணியின் ஜெர்சியில் ‘DADA’ எனக் குறிப்பிட்டு பரிசளித்துள்ளது. கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகள் சானாவுடன் அமர்ந்து இருக்கும் படத்தை வெளியிட்டு ‘‘பார்சிலோனாவில் அப்பா, சானா’’ என்று பதிவிட்டுள்ளார்.
In Barcelona .. dad and Sana ... pic.twitter.com/Ic3U8KPTgs
— Sourav Ganguly (@SGanguly99) December 22, 2018
இவரை ஸ்பெயின் நாட்டின் லா லிகா தொடரில் விளையாடும் முன்னணி அணியான பார்சிலோனா அழைத்து, அந்த அணியின் ஜெர்சியில் ‘DADA’ எனக் குறிப்பிட்டு பரிசளித்துள்ளது. கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகள் சானாவுடன் அமர்ந்து இருக்கும் படத்தை வெளியிட்டு ‘‘பார்சிலோனாவில் அப்பா, சானா’’ என்று பதிவிட்டுள்ளார்.