செய்திகள்

விஜய் ஹசாரே டிராபி- மும்பை அணிக்கு ரகானே கேப்டன்

Published On 2018-09-12 16:04 GMT   |   Update On 2018-09-12 16:04 GMT
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். #Rahane #VijayHazareTrophy
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இதில் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் பரோடாவை எதிர்கொள்கிறது. இதற்கான மும்பை அணி இன்று அறிவிக்கப்பட்டது. ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான ப்ரித்வி ஷா அணியில் இடம்பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் ரகானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் மும்பை அணிக்காக விளையாடுகிறார்.
Tags:    

Similar News