செய்திகள்

யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது- பிரகாஷ் ஜவடேகர்

Published On 2019-06-01 15:05 GMT   |   Update On 2019-06-01 15:05 GMT
யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
புதுடெல்லி:

மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக் கொள்கையை பரிந்துரைத்துள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இந்தி பேசாத மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. 

மத்திய அரசின் மும்மொழி திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், இதுபற்றி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை. இந்திய மொழிகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

தற்போது வெளியாகி இருப்பது வரைவு அறிக்கை மட்டுமே. மக்களின் கருத்தை கேட்டறிந்த பிறகே முடிவு எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News