செய்திகள்
இமாச்சலப்பிரதேசத்தில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மாப்பிள்ளை
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மனாலி பாராளுமன்ற தொகுதியில் இன்று திருமணமான ஒருவர் மணக்கோலத்தில் தனது குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தார்.
சிம்லா:
பீகார், இமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மனாலி பாராளுமன்ற தொகுதியில் உள்ள எட்டாம் எண் கொண்ட வாக்குச்சாவடிக்கு மணக்கோலத்தில் தனது குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தார்.