செய்திகள்

பராமரிப்பு பணி: மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2019-05-31 23:11 GMT   |   Update On 2019-05-31 23:11 GMT
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

* மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இடையே இரவு 8.55, 9.40, 11.10, 11.45 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே இரவு 9.15, 10.10, 10.45 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி இடையே இரவு 9.50, 10 மணி, சென்னை கடற்கரை-ஆவடி இடையே இரவு 9.45 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் இடையே மாலை 6.55, இரவு 9.25, 9.45 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் இடையே இரவு 8.50, 9.55 மணி, திருவள்ளூர்-ஆவடி இடையே இரவு 10.10 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் இடையே இரவு 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று(சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* மூர்மார்க்கெட்-ஆவடி இடையே இரவு 10.10, 10.15 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே இரவு 11.45, 11.50 மணி, வேளச்சேரி-ஆவடி இடையே இரவு 9.05 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இடையே இரவு 11.55 மணிக்கும், திருவள்ளூர்-ஆவடி இடையே 10.55 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் இரவு 10 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் இரவு 10.10 மணிக்கு இன்று சிறப்பு பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News