செய்திகள்

குழந்தைகள் விற்பனை வழக்கு - 5 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Published On 2019-05-09 03:41 GMT   |   Update On 2019-05-09 03:41 GMT
ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #RasipuramNurse #CBCID
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அமுதவள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அமுதவள்ளி, ரவிச்சந்திரன், பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா ஆகிய 5 பேரும் கடந்த 6-ந் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  #RasipuramNurse #CBCID
Tags:    

Similar News