செய்திகள்

முத்தியால்பேட்டையில் எம்.காம். பட்டதாரி பெண் மாயம்

Published On 2019-05-06 11:33 GMT   |   Update On 2019-05-06 11:33 GMT
முத்தியால்பேட்டையில் எம்.காம். பட்டதாரி பெண் மாயமானார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

முத்தியால்பேட்டை பஜனை மடத்து வீதியை சேர்ந்தவர் ராமு. இவர் பெரியமார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சுசீலா. இவர் பெரியமார்க்கெட் மீன் மார்க்கெட்டில் கருவாடு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களது மகள் சக்தி என்ற புவனேஸ்வரி (வயது24). இவர் எம்.காம். படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சக்தியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சக்தி இல்லை. இதையடுத்து சக்தியின் பெற்றோர் தங்களது மகள் மாயமானது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரவேலு வழக்குபதிவு செய்து மாயமான சக்தியை தேடிவருகிறார்.

Tags:    

Similar News