செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் தனியார் நிறுவன காவலாளி மயங்கி விழுந்து பலி

Published On 2019-04-27 13:03 GMT   |   Update On 2019-04-27 13:03 GMT
மேட்டுப்பாளையத்தில் தனியார் நிறுவன காவலாளி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

திருச்சியை சேர்ந்தவர் மணி (வயது 69). இவர் கடந்த 20 ஆண்டுகளாக புதுவையில் நண்பருடன் தங்கி மேட்டுப்பாளையத்தில் பாலிதீன் பை தயாரிக்கும் தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 24-ந்தேதி தவறி விழுந்ததில் மணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஆனால், இதற்கு எதுவும் சிகிச்சை பெறாமல் மறு நாள் 25-ந்தேதி வழக்கம் போல் தொழிற்சாலைக்கு பணிக்கு வந்தார்.

அப்போது திடீரென மணி மயங்கி விழுந்தார். உடனே தொழிற்சாலையில் இருந்த மற்ற ஊழியர்கள் மணியை மீட்டு சிகிச்சைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை மணி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து மணியின் மகன் கதிரேசன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News