search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private company"

    • நிறுவனம் வழங்கிய வங்கி மென்பொருளை அணுக முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
    • தலைமறைவாக இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பெங்களூரு:

    இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஐடி எனும் தகவல் தொழில்நுட்பம், பிடி எனும் உயிரி தொழில்நுட்பம் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் முன்னணி தொழிற்சாலைகள் பெங்களூருவில் அமைந்திருப்பது தான். இதை நோட்டமிட்டு இணையதளத்தை பயன்படுத்தி தகவல்களை திருடி மோசடி செய்யும் ஹேக்கர் கும்பல் பெங்களூருவில் நடமாடுகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் சென்னை மென்பொருள் நிறுவனத்தின் வெளிநாட்டு வாடிக்கையாளர் தரவு திருடப்பட்டதாக பெங்களூரு மாநகர போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

    அதில், கம்பெனிசிவ் கிரெடிட் ரிப்போர்ட்டிங் சாப்ட்வேர் செயலியை பயனர்களால் அணுக முடியவில்லை. இது தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்தன. நிறுவனம் வழங்கிய வங்கி மென்பொருளை அணுக முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். மர்ம நபர்கள் தங்களது நிறுவனத்தின் செயலியை முடக்கி வாடிக்கையாளர் தரவுகளை திருடி உள்ளனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஹேக்கிங் செய்தது பெங்களூருவை சேர்ந்த காவ்யா வசந்த கிருஷ்ணன், ரவிதா தேவசேனாபதி மற்றும் கருப்பையா, சென்னையை சேர்ந்த எடிசன் ரமேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் 5 பேரும் ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவார்கள். கடந்த அக்டோபர் மாதம் 9 -ந் தேதி அதிகாலை 1 மணியளவில் சென்னையில் இருந்து தொடங்கிய 3 மணி நேர கான்பரன்ஸ் அழைப்பின்போது ஹேக்கர் செய்து மோசடியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • அப்துல் ரஹிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கரு ங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அப்துல் ரஹிமான் (வயது 29). இவர் ஒரு தனியார் கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பாஷீரா (22).

    இந்நிலையில் சம்பவத்தன்று அப்துல் ரஹிமான் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பினார்.

    பின்னர் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் பாஷீரா தனது கணவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்துல் ரஹிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி பாஷிரா கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் தனியார் நிறுவன அதிகாரி மயங்கி விழுந்து இறந்தார்.
    • நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை.

    மதுரை

    மதுரை பொன்மேனி முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் திருநாவுக்கரசு (வயது 30). மாற்றுத்திறனாளியான இவர் காளவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு நிதி நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

    அவர் பணியில் இருந்த போது பாத்ரூம் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதை தொடர்ந்து சந்தேகமடைந்த ஊழியர்கள் பாத்ரூமின் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு திருநாவுக்கரசு ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நிதநிறுவன துணை மேலாளர் திருநாவுக்கரசின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது குடித்து கும்பல் புவன்ராஜை சரமாரியாக தாக்கியது. இதனால் புவன்ராஜ் அலறல் சத்தம் போட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வீரா உள்ளிட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கம் திருமண நிலைய வீதியை சேர்ந்தவர் புவன்ராஜ்(வயது26). இவர் நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனி கேண்டினில் சமையல் வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு புவன்ராஜ் அவரது நண்பர் விஜயுடன் வீட்டின் அருகே உள்ள நெல் களத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு அருகே கரியமாணிக்கம் காலனியை சேர்ந்த வீரா(20) மற்றும் அவருடன் 8 பேர் கொண்ட கும்பல் மது குடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருந்தனர்.

    இதனை புவன்ராஜ் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த வீரா மற்றும் அவருடன் மது குடித்து கும்பல் புவன்ராஜை சரமாரியாக தாக்கியது. இதனால் புவன்ராஜ் அலறல் சத்தம் போட்டார்.

    இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த புவன்ராஜியின் அண்ணன் பிரதீப்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

    இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

    பின்னர் தாக்குதலில் காயமடைந்த புவன்ராஜை அவரது அண்ணன் பிரதீப்ராஜ் மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பிரதீப்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரா உள்ளிட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    • எம்.ஐ.டி.கல்லூரியில் நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் ஆன்லைன் மூலகமாக பயிற்சி நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.கல்லூரி), சென்னை ஐஸ்கேல் ப்ரோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு பரிமாற்றம் செய்து கொண்டது.

    எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் ஆன்லைன் மூலகமாக பயிற்சி ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொதுவான நோக்கங்கள் ஆகும்.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் முன்னிலையில், எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், ஐஸ்கேல் ப்ரோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட் ராமகிருஷ்ணன், வித்யா சந்திரசேகரன் இயக்குனர், இணை நிறுவனர் கணபதி ராமன் சீனியர் சாப்ட்வேர் என்ஜினீயர், மற்றும் அனைத்து வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இருந்தனர்.

    • தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே தெற்கு சிலுக்கன்பட்டி பகுதி தனியார் நிறுவனத்தில் உள்ள ஜெனரேட்டரில் இருந்து காப்பர் வயரை 3 பேர் திருடி சென்றுள்ளனர்.
    • இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளரான மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ஆத்தி முத்துவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே தெற்கு சிலுக்கன்பட்டி பகுதி தனியார் நிறுவனத்தில் உள்ள ஜெனரேட்டரில் இருந்து காப்பர் வயரை 3 பேர் திருடி சென்றுள்ளனர். இதனை அங்கு வேலை செய்யும் இரவு காவலாளிகள் அரிபுத்திரன், சூசைமரியான் ஆகியோர் கண்டு அவர்களை துரத்தி பிடிக்க முயன்றனர். இதில் இதில் கீழத்தட்ட பாறை தெற்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது 30) என்பவர் பிடிபட்டார். அவரது கூட்டாளிகள் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாள ரான மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ஆத்தி முத்துவுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர் புது க்கோட்டை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெ க்டர் ஞானராஜ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தார். தொடர்ந்து அவரி டம் இருந்த காப்பர் வயரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள இசலி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் சண்முகமுனீஸ்வரன் (வயது29). இவர் அருப்புக் கோட்டையிலுள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு கடந்த வருடம் யோகிதா (26) என்பவருடன் திருமணமானது. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தார். இந்நிலை யில் நேற்று மாலை கரு மேகத்துடன் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

    அப்போது சண்முக முனீஸ்வரன் புதியதாக கட்டிவரும் அவரது வீட்டு மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு வைத்து செட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது திடீரென மின்னல் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    சண்முக முனீஸ்வரனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவி னர்கள் மின்னல் தாக்கி படுகாயமடைந்தவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே சண்முக முனீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.

    • திறன் மேம்பாடு மற்றும் தரவு ஆன்லைன் குறித்த செர்டிபைட் பயிற்சி அளிப்பதின் நோக்கம் ஆகும்.
    • துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.கல்லூரி), சென்னை சைபர் ஹீல்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு பரிமாற்றம் செய்து கொண்டது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் தரவு ஆன்லைன் குறித்த செர்டிபைட் பயிற்சி அளிப்பதின் நோக்கம் ஆகும்.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி முனைவர்.எம்.ஜெயக்குமார் முன்னிலையில், எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் சைபர் ஹீல்ஸ் நிறுவனர் முகமத் இப்ராஹிம், துறை தலைவர் பூங்குழலி மற்ற துறை தலைவர்கள் மேலும் துறை பேராசிரியர்கள் கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதுவை தவளக்குப்பம் அருகே அபிஷேகபாக்கம் புதுநகரை சேர்ந்தவர் பிரபுதாஸ்
    • புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்

    புதுச்சேரி:

    புதுவை தவளக்குப்பம் அருகே அபிஷேகபாக்கம் புதுநகரை சேர்ந்தவர் பிரபுதாஸ்.  இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அபிஷேகப்பாக்கம்-உருவையாறு ரோட்டில் செல்போனில் பேசியபடியே வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அங்குள்ள கருமகாரிய கொட்டகை அருகே வந்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பிரபுதாசை தடுத்து நிறுத்தி வில்லியனூருக்கு வழி கேட்டனர்.

    பிரபுதாஸ் வழி சொல்லிக்கொண்டிருந்த போது திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி பிரபுதாசிடம் செல்போனை கொடுத்து விடு இல்லையென்றால் வெட்டி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன பிரபுதாஸ் செய்வதை அறியாமல் தவித்தார். உடனே அந்த கும்பல் பிரபுதாசிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டது.

    இதையடுத்து செல்போனை பறிகொடுத்த பிரபுதாஸ் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து செல்போனை பறித்து சென்ற கும்பலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றம் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.
    • முதுகலை கணினித் துறைத் தலைவர் ராமலிங்கம் மற்றும் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    புதுச்சேரி:

    புதுவை, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியுடன் ஹட்டுஸா ஐ.டி. சொல்யூஷன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எம்.சி.ஏ. மற்றும் பி.டெக் மாணவர்களுக்கு மேம்பட்ட மென்பொருள் திறன் அறிவு பயிற்சி மற்றும் ேவலைவாய்ப்பிற்காக கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தக்ஷஷீலா பல்கலைக்கழத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றம் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஹட்டுஸா ஐ.டி. ெசால்யூஷன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சீனுவாசன், மூத்த மென்பொருள் யூசர் இன்டர்பேஸ் டிசைனர் பாலாஜி, கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் டாக்டர் வெங்கடாசலபதி ஆகியோர் கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், ேதர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகடாமி டீன்கள் அன்புமலர் மற்றும் அறிவழகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் டீன் வேல்முருகன் வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் கைலாசம் மற்றும் மதுசூதனன், முதுகலை கணினித் துறைத் தலைவர் ராமலிங்கம் மற்றும் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    • தேவகோட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த அரசு ஊழியர்கள் புகார் கொடுக்க அச்சம் அடைந்துள்ளனர்.
    • பணம் செலுத்தியவர்கள் புலம்புகின்றனர்.

    தேவகோட்டை

    விருதுநகரை தலைமை இடமாக கொண்டு செயல் பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் நியோ மேக்ஸ் இந்நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் 3 இயக்குநர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் அனை வரும் முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இவர்க ளது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

    மேலும் இவர்கள் 68 போலி நிறுவனங்கள் நடத்தி பணம் வசூலித்து உள்ள தாகவும், இதுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதுவரை சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது.

    தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரம் முகவர்களை கொண்டு பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் இந்நிறுவனத்தில் பெரும்பா லும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணம் முதலீடு செய்துள்ளனர்.

    இந்தப் பகுதியில் உள்ள முகவர்கள் தங்கள் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விற்று பணமாக பதுக்கி வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.இந்த நிலையில் அந்த நிதி நிறுவனம் இது சம்பந்தமாக யாரும் புகார் அளிக்க கூடாது. மீறி புகார் அளித்தால் நீங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காது என மிரட்டி வருவதாக நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் புலம்புகின்றனர். முகவர்களை காவலில் எடுத்து விசாரித்து யார் யார் பெயரில் சொத்துக்கள் உள்ளது எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளது. பினாமிகள் உறவுக்கா ரர்கள் யார் என்பதை கண்டறிந்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற னர்.

    தேவகோட்டை பகுதி களில் பல நிதி நிறுவ னங்கள் இது போன்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி அதிக வட்டி தருவதாக செயல் பட்டு வருகிறது. அவர்க ளையும் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தை காப்பாற்ற முடியும்.

    • திருமங்கலம் அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் கப்பலூர் தொழிற்பேட்டையில் நித்தியானந்தம் என்பவர் தனியார் டெக்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு இந்த நிறுவனத்தில் எந்திரம் இயங்கி கொண்டிருந்த பொழுது திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து திருமங்கலம் தீயணைப்பு போலீசார் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து எந்திர மோட்டார்கள், மூலப்பொருட்கள், தறிகள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×