செய்திகள்

சோளிங்கர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2019-01-12 11:34 GMT   |   Update On 2019-01-12 11:34 GMT
சோளிங்கர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோளிங்கர்:

சோளிங்கர் அடுத்த பாராஞ்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா (வயது 30). இவர் நேற்று மாலை வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க வீட்டை பூட்டி சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர்.

சிறிது நேரம் கழித்து விட்டிற்கு வந்த உமா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை கொள்ளை போனது தெரிய வந்தது.

இது குறித்து உமா சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News