செய்திகள்

மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Published On 2018-12-25 12:16 GMT   |   Update On 2018-12-25 12:16 GMT
மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மதுரை:

மதுரை அரசரடி, உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (26-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

அதன்படி சம்பட்டிபுரம் மெயின்ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்து ராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக்நகர் 4 முதல் 16 தெரு வரை, தேனி மெயின்ரோடு, விராட்டிப் பத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி. மெயின்ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக் நகர் 1 முதல் 3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேலப் பொன்னகரம் 2,3,10 -வது தெரு, கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்டு வரை, ஆர்.வி.நகர், ஞான ஒளிவுபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ். காலனி ஏரியா, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1 முதல் 5-வது தெரு, சொக்க லிங்கநகர் 1 முதல் 8-வது தெருவரை, பொன்மேனி, சம்பட்டி புரம், பொன்மேனி மெயின்ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், இன்கம் டாக்ஸ் காலனி, இந்திராநகர், குட்செட் ரோடு, மீனாட்சி பஜார், தெற்கு மண்டல அலுவலக பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News