செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பஸ் மோதி வியாபாரி பலி

Published On 2018-12-16 08:38 GMT   |   Update On 2018-12-16 08:38 GMT
கும்மிடிப்பூண்டி அருகே பஸ் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த அப்பாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது35). இவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் ஷோபா மற்றும் படுக்கை விரிப்புகளை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

இவரது மனைவி மவுனி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது மவுனி கர்ப்பமாக உள்ளார்.

நேற்று இரவு சதீஷ் கடையை பூட்டி விட்டு எளாவூர் வழியாக வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வீராசாமி நகர் அருகே மேம்பாலத்தின் கீழ் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது எளாவூரில் இருந்து கள்ளூர் நோக்கிச் சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் வியாபாரி சதீஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். விபத்து குறித்து ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News