செய்திகள்
எண்ணூர் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
எண்ணூர் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
எண்ணூர் நேதாஜி நகரில் உள்ள தனியார் கண்டெய்னர் லாரி நிறுத்தும் இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் ராம் ஈஸ்வர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் அதே பகுதியில் தங்கி உள்ளார். இவர் வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது ராம் ஈஸ்வர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.