search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணூர்"

    • எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.

    எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிச்சாங் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது. பின்னர் எண்ணூர் முகத்துவார பகுதியில் போய் கடலில் கலந்தது.

    இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

    பைபர் படகில் சென்று எண்ணெய் கழிவு பாதிப்புகளை அவர் பார்வையிட்டார்.

    பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், " இங்கு நான் பலமுறை வந்துள்ளேன். கடந்த காலத்தைவிட பாதிப்பு அதிகமாக தான் இருக்கிறது.

    நீதிமன்ற உத்தரவுப்படி இன்றுக்குள் எண்ணெய் கழிவு அகற்றுவது போல் ஒரு அறிகுறியும் இங்கு இல்லை.

    எண்ணெய் கழிவு அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை.

    எண்ணெய் கழிவு விவகாரத்தில் ஒருவருக்கொருவர் பழி போட்டு வருகின்றனர்.

    எண்ணெய் கழிவு பாதிப்பு பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை தேவை. கடுமையான சட்ட நடவடிக்கை இருந்தால் அச்சம் ஏற்படும்.

    இது மீனவர்களின் பூமி. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

    • ராமகிருஷ்ணா நகர் அருகே கடற்கரையில் இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது.
    • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு எண்ணூர் போலீஸ் விரைந்து வந்து மிதவையை ஆய்வு செய்தனர்.

    எண்ணூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக எண்ணூர் பகுதியில் நேற்று முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடலில் கிடந்த சிறிய அளவிலான கற்கள் மரங்களை சாலையில் தூக்கி வீசியது.

    இந்த நிலையில் இன்று ராமகிருஷ்ணா நகர் அருகே கடற்கரையில் இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது. இது ராட்சத கேஸ் சிலிண்டர் போன்று காட்சியளித்ததால் பொதுமக்கள் பயந்து போய் எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு எண்ணூர் போலீஸ் விரைந்து வந்து அந்த மிதவையை ஆய்வு செய்தனர். அப்போது, கப்பல்களின் ராட்சத இரும்பு சங்கிலி மூலம் நங்கூரத்தில் கட்டப்பட்டு கடலில் மிதக்கும் மிதவை என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ×