செய்திகள்

திருநின்றவூரில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் 10 கிராமங்களில் மின் தடை

Published On 2018-09-27 09:22 GMT   |   Update On 2018-09-27 09:22 GMT
திருநின்றவூர் கோமதிபுரத்தில் உள்ள மின்வாரியத்தில் நேற்று இரவு திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
திருநின்றவூர்:

திருநின்றவூர் கோமதிபுரத்தில் உள்ள மின்வாரியத்தில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.

இதனால் திருநின்றவூர், நெமிலிச்சேரி, பாக்கம், வேப்பம்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் இருளில் தவித்தனர். இன்று மதியம் வரை மின்தடை நீடித்தது. பழுதான டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News