செய்திகள்

லண்டனில் பேட்டரி பேருந்து பணிமனையை பார்வையிட்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்

Published On 2018-09-18 10:47 GMT   |   Update On 2018-09-18 10:47 GMT
சென்னையில் பேட்டரி பேருந்து சேவை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக லண்டனில் உள்ள பேட்டரி பேருந்து பணிமனையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #ChennaiElectricBus #MRVijayabaskar #London
சென்னை:

சென்னையில் விரைவில் பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகள் (மின்சார பேருந்து) இயக்கப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக 100 பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பேட்டரி பேருந்து சேவைகள் தொடர்பாக, லண்டனில் பேட்டரி பேருந்துகளை இயக்கும் சி-40 நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். அப்போது சென்னையில் எந்தெந்த வழித்தடங்களில் பேட்டரி பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், லண்டன் சென்ற போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பேட்டரி பேருந்துகளை இயக்கும் பணிமனைக்கு சென்று பார்வையிட்டார். பேட்டரி பேருந்து போக்குவரத்து எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதுபற்றி அறிந்துகொண்டார். போக்குவரத்து துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து சார்ந்த தொழிலதிபர்களையும் சந்தித்து பேசினார். #ChennaiElectricBus #MRVijayabaskar #London
Tags:    

Similar News