ஆன்மிகம்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் 17-ந் தேதி தேரோட்டம்

Published On 2019-05-14 06:57 GMT   |   Update On 2019-05-14 06:57 GMT
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் தேரோட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெறும்பூரில், மலைமேல் எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 17-ந் தேதி(வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி, கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாநகராட்சி நிர்வாகம் கோவிலில் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News