ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் திருநட்சத்திர பெருவிழா
ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் திருநட்சத்திர பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உடையவர் சன்னதியில் ஸ்ரீமத் ராமானுஜர் 1002-வது திருநட்சத்திர பெருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் உபன்யாசம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமானுஜரின் 1002-வது திருநட்சத்திர தினமான நேற்று உற்சவர் ராமானுஜர் காலை 6.30 மணிக்கு 4 சித்திரைவீதிகளில் உலா வந்தார். பின்னர் ராமானுஜர் சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மதியம் 2 மணியளவில் பெருமாளிடம் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்கள் மற்றும் மாலைகளால் ராமானுஜருக்கு உச்சாத்து அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் கோஷ்டி பூஜை நடைபெற்றது. மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்குழு தலைவர் வேணுசீனிவாசன். இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அறங்காவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
ராமானுஜரின் 1002-வது திருநட்சத்திர தினமான நேற்று உற்சவர் ராமானுஜர் காலை 6.30 மணிக்கு 4 சித்திரைவீதிகளில் உலா வந்தார். பின்னர் ராமானுஜர் சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மதியம் 2 மணியளவில் பெருமாளிடம் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்கள் மற்றும் மாலைகளால் ராமானுஜருக்கு உச்சாத்து அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் கோஷ்டி பூஜை நடைபெற்றது. மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்குழு தலைவர் வேணுசீனிவாசன். இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அறங்காவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.