ஆன்மிகம்

புதன் கிரகம் தரும் நன்மை - தீமைகள்

Published On 2018-06-01 06:29 GMT   |   Update On 2018-06-01 06:29 GMT
ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். அவரை உலகமே திரும்பிப் பார்க்கும்.
நவக்கிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். அவரை உலகமே திரும்பிப் பார்க்கும். எந்த நேரமும் கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் பேசும் இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

அரசனுக்கே அறிவுரை கூறி ஆட்சியை வழிபடுத்தும் சக்தியைத் தருவது புதன் கிரகம். ஒருவர் ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த நபரிடம் ஆலோசனைக் கேட்க பலரும் காத்திருப்பார்கள். அந்த நபர் மருத்துவம், ஜோதிடம், இசை, ஆயக்கலைகள், கைகடிகாரம், மோட்டார் தொழில் நுட்ப அறிவு போன்றவற்றில் ஞானம் உடையவராக இருப்பார். புதன் கிரகம் ஒருவருக்கு கவர்ச்சி நிறைந்த கம்பீர தோற்றம் தந்து அவரை வசீகரிக்க வைக்கும். பிறரால் முடியாத வேலைகளைக் கூட புதன் யோகம் பெற்றவர்கள் எளிதாக செய்து விடுவார்கள். கணித சாஸ்திரம், வான சாஸ்திரம், கணினி துறையில் சிறப்புற்று விளங்குவர். நாட்டு வைத்தியம் செய்பவராக இருந்தால், கைராசியானவர் என்று பெயர் எடுப்பார்கள்.

புதன் யோகம் அல்லது உச்சம் பெற்றவர்கள், நவபாஷாணம் மற்றும் ரசவாத கலைகளிலும், யோகா மற்றும் தியான கலைகளிலும் வல்லுனராக இருப்பார்கள். மிகப்பெரிய பல்பொருள் அங்காடிக்கு அதிபதியாகும் வாய்ப்பு புதனால் வரக்கூடியதுதான். நினைத்ததும் கவிபாடும் திறன், இலக்கண இலக்கிய அறிவு போன்றவற்றைத் தருபவரும் புதனே. கோவில்களில் இருக்கும் சிற்ப வேலைபாடுகளுக்குரிய அறிவைத் தருபவரும் புதன் தான். புதன் ஆதிக்கம் பெற்றவர்கள், மேஜிக் மற்றும் வேடிக்கை நிகழ்வு களை நடத்துபவராக இருப்பார்கள். ஒருவர் பல ஆண்டுகளாக பத்திரிகை தொழிலில் முதன்மை பெற்றவராக திகழவும் புதனே காரணமாக உள்ளார்.
Tags:    

Similar News