search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பள்ளிகொண்ட அரங்கநாதர்
    X

    பள்ளிகொண்ட அரங்கநாதர்

    • அதே சுவரில் மகா விஷ்ணு திரிவிக்ரமனராக விண்ணையும் மண்ணையும் அளந்தவராகக் காட்சியளிக்கிறார்.
    • அடுத்து, நான்கு வேதங்களையும், பூமாதேவியையும் தாங்கியவராகக் காட்சியளிக்கிறார்.

    நாமக்கல் திருக்கோவிலின் அர்த்தமண்டப சுவற்றில் ஸ்ரீமகா விஷ்ணுவின் அவதாரங்களின் அழகிய கலை வடிவங்களைக் காணமுடிகிறது.

    சூரியன், சந்திரனோடு சிவபெருமான், பிரம்ம தேவர், மார்க்கண்டேயர் மற்றும் பூமாதேவி ஆகியோர் வைகுண்ட நாராயணரோடு அருள் தருகின்றனர்.

    அபய நரசிம்மரும் எழுந்தருள்கிறார்.

    அடுத்த சுவற்றில், உக்ர நரசிம்மர் தனது கூரிய நகங்களால் இரணியனின் மார்பைக் கிழிக்கும் காட்சி இடம் பெற்று உள்ளது.

    சுவற்றின் மறுபுறத்தில் வாமனமூர்த்தி மகாபலி சக்கரவர்த்தியிடம் தானம் பெறுவதையும், தானம் தருவதைத் தடுக்கும் சுக்ராசாரியரைத் தண்டிக்கும் கருடாழ்வாரையும், ஜாம்பவானையும் காணமுடிகிறது.

    அதே சுவற்றில் மகா விஷ்ணு திரிவிக்ரமனராக விண்ணையும் மண்ணையும் அளந்தவராகக் காட்சி தருகிறார்.

    அடுத்த சுவற்றில், நான்கு வேதங்களையும், பூமாதேவியையும் தாங்கியவராகக் காட்சி தருகிறார்.

    இப்பாறையின் கிழக்குப்புறத்தில் உள்ள குகைக்கோவிலில் ரங்கநாதர் கார்கோடக நாகர் மீது பள்ளி கொண்டு அருள் தருகிறார்.

    Next Story
    ×