search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு செய்யும்  அபிஷேக பலன்கள்
    X

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு செய்யும் அபிஷேக பலன்கள்

    • தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது.
    • வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோசத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.

    வடைமாலை பலன்:

    சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியே கிரகணம் எனப்படுகிறது.

    அப்பேர்ப்பட்ட சூரிய பகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து சூரியனை பிடித்துக் கொள்கிறார்.

    அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார்.

    அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட இந்திரனுக்கும், அனுமானுக்கும் போர் ஏற்படுகிறது.

    அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் மாகப்பட்டது அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது.

    தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ராகு பகவான் தனக்கு ஏற்பட்ட தோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்புபோல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று ராகு அனுமானிடம் கூறுகிறார்.

    ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோசத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.

    Next Story
    ×