search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூடான் பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
    X

    பூடான் பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் வந்துள்ள ஜெய்சங்கர் நேபாளப் பிரதமர் லோட்டேய் ஷெரிங்-ஐ இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    திம்பு:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது மத்திய மந்திரிசபையில் வெளியறவுத்துறை மந்திரியாக பதவியேற்ற ஜெய்சங்கர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இன்று பூடான் வந்தடைந்தார்.

    திம்பு விமான நிலையத்தில் அவருக்கு பூடான் வெளியுறவுத்துறை மந்திரி டாண்டி டோர்ஜி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் இந்தியா-நேபாளம் இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்திய ஜெய்சங்கர், நேபாளப் பிரதமர்  லோட்டேய் ஷெரிங்-ஐயும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


    நாளை வரை திம்புவில் தங்கியிருக்கும் ஜெய்சங்கர், பூடான் மன்னர் ஜிக்மே கேஷர் நாம்கெய்ல் வாங்சுக்-கை சந்திக்கவுள்ளார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் இந்தியா-பூடான் இடையே பொருளாதார மேம்பாடு, புனல்மின்சார உற்பத்தி உள்பட சில முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×