search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் சூறாவளி புயல்-வெள்ளம்: 2 பேர் பலி
    X

    அமெரிக்காவில் சூறாவளி புயல்-வெள்ளம்: 2 பேர் பலி

    அமெரிக்காவில் வீசிய சூறாவளி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் காயம் அடைந்த 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஒக்லகோமா மாகாணத்தில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. நள்ளிரவில் கடுமையாக காற்று வீசியது. அப்போது மழையும் கொட்டியது.

    இதனால் ஒக்லகோமா நகரில் பல வீடுகள் தரைமட்டமாயின. வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இங்கு சூறாவளி புயல் தாக்கும் என முன் எச்சரிக்கை விடப்பட்டதால் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறினர்.

    அங்கு மணிக்கு 136 முதல் 165 மைல் வேகத்தில் சூறாவளி புயல் வீசியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    சூறாவளி புயல் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 29 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

    கடந்த 3-ந்தேதியும் இங்கு கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 300 மைல் (480 கி.மீ.) வேகத்தில் காற்று வீசியது. 36 பேர் உயிரிழந்தனர்.
    Next Story
    ×