search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் - 5.7 ரிக்டரில் பதிவானது
    X

    பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் - 5.7 ரிக்டரில் பதிவானது

    பப்புவா நியூ கினியா நாட்டின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    மாஸ்கோ:

    பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. டாரன் என்ற மலை பகுதிக்கு தென்மேற்கே 95 கி.மீட்டர் தொலைவில் இதன் அதிர்வுகள் பதிவாகி உள்ளன.

    இந்த நிலநடுக்கம் 25.3 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

    பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் நேற்று முன்தினம் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×