search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொழும்பு பஸ் நிலையத்தில் 87 டெடனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன
    X

    கொழும்பு பஸ் நிலையத்தில் 87 டெடனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன

    இலங்கை தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாடு முழுவதும் போலீசார் நடத்திவரும் சோதனையில் கொழும்பு – புறக்கோட்டை பெஸ்ட்டியன் மாவத்தையில் இன்று 87 டெடனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன. #87detonatorsfound #Fortbusstation #SriLankablasys
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதுவரை யாரும் பொறுப்பேற்காத இந்த தாக்குதல்களில் 5 இந்தியர்கள் 290 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
     
    இந்த கொடூர தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் 24 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் சந்தேகத்துக்குரிய பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டை மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், கொழும்பு – புறக்கோட்டை பெஸ்ட்டியன் மாவத்தையில் போலீசாரின் தேடுதல் வேட்டையில் 87 டெடனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன.

    பெஸ்ட்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் நிலையத்தில் 12 டெடனேட்டர்களும் அங்கு குப்பை குவிக்கப்பட்ட இடத்தில் 75 டெடனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #87detonatorsfound #Fortbusstation #SriLankablasys
    Next Story
    ×