search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்சிகோ நாட்டில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி
    X

    மெக்சிகோ நாட்டில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாட்டோ மாநிலத்தில் சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். #Buscrash #Mexico
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாட்டோ மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் ஒரு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது.

    லேகான் நகரத்தின் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நிறைமாத கர்ப்பிணி உள்பட காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Buscrash  #Mexico
    Next Story
    ×