search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் மழை, வெள்ளத்துக்கு 12 பேர் பலி
    X

    இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் மழை, வெள்ளத்துக்கு 12 பேர் பலி

    மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் புயல் காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். #Sicilyfloods #12killed
    ரோம்:

    மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் உள்ள அக்ரிகென்ட்டோ, கம்மாராட்டா பகுதியில் நேற்று புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த பெருமழையால் சரகெனோ ஆற்றில் இருந்து பாய்ந்துவந்த உபரிநீர் இங்குள்ள சுற்றுலாத்தலங்களை வெள்ளக்காடாக மாற்றியது.

    வார விடுமுறைக்காக பாலர்மோ பகுதியில் சுற்றுலா வந்து ஓய்வு விடுதியில் தங்கியிருந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த 9 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதேபோல் மற்ற பகுதிகளில் 3 பேர் நீரில் மூழ்கியதால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. #Sicilyfloods #12killed
    Next Story
    ×