search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    16 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை கைது செய்தது
    X

    16 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை கைது செய்தது

    பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 16 மீனவர்களை அந்நாட்டின் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். #Indianfishermen #Pakistanarrests
    இஸ்லாமாபாத்:

    அராபிய கடலில் மீன் பிடிக்கும்போது தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியா  மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் எதிர்நாட்டை சேர்ந்த மீனவர்கள் கைது செய்வது தொடர்ந்து வருகிறது.

    அவ்வகையில், இந்தியாவில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை கடந்த திங்கட்கிழமை  பாகிஸ்தான் கடலோர காவல் படை கைது செய்தனர். அவர்கள் சென்ற 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கராச்சி துறைமுகம் பகுதியில் உள்ள காவல் நிலைய போலீசார் கைதான மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அடைத்து வைத்துள்ளனர். #Indianfishermen #Pakistanarrests
    Next Story
    ×