என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அமெரிக்க நாடுகளில் அடைமழை - 12 பேர் பலி
Byமாலை மலர்8 Oct 2018 10:07 AM GMT (Updated: 8 Oct 2018 10:07 AM GMT)
மத்திய அமெரிக்காவில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை தொடர்பான விபத்துகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். #CentralAmericaRain
ஹோண்டுராஸ்:
மத்திய அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கவுதமாலாவில் இருந்து கோஸ்டா ரிகா வரையிலான பகுதிகளில் கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. தினமும் சராசரியாக 50 முதல் 100 மிமீ வரை மழை பெய்கிறது.
மழை மற்றும் நிலச்சரிவினால் ஹோண்டுராஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. நீர்வழிப்பாதைகள் மற்றும் மலைப்பகுதியில் அபாயகரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மழை நீரில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #CentralAmericaRain
மத்திய அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கவுதமாலாவில் இருந்து கோஸ்டா ரிகா வரையிலான பகுதிகளில் கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. தினமும் சராசரியாக 50 முதல் 100 மிமீ வரை மழை பெய்கிறது.
இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள், தகவல் தொடர்பு தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மழை பாதிப்பு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பான விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததாக மீட்பு மற்றும் அவசரகால பணிகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை மற்றும் நிலச்சரிவினால் ஹோண்டுராஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. நீர்வழிப்பாதைகள் மற்றும் மலைப்பகுதியில் அபாயகரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மழை நீரில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #CentralAmericaRain
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X