search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு எதிரான வழக்கு - சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் இன்று வாதம்
    X

    அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு எதிரான வழக்கு - சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் இன்று வாதம்

    அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் இன்று தனது வாதத்தை முன்வைக்க உள்ளது. #USSanctions #DonaldTrump #ICJ #IranUSLawsuit
    தி ஹேக்:

    ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மே மாதம் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார். மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை வரும் நவம்பர் மாதத்துடன் முழுவதுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

    குறிப்பாக ஈரானின் எண்ணெய் வளம் மற்றும் ஆற்றல் துறைகளை குறிவைத்து மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.  இதனால் ஈரான்  பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது. அந்நாட்டின் பண மதிப்பும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

    அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் மீது இன்று விசாரணை தொடங்க உள்ளது. அப்போது ஈரான் அரசு தங்கள் தரப்பு நியாயத்தையும், அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமாக கூற உள்ளது.



    அமெரிக்கா விதித்துள்ள தடைகள் சீர்படுத்த முடியாத அளவிற்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய தடைகளை விதிப்பதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்றும் ஈரான் தனது மனுவில் கூறியிருக்கிறது. மேலும், அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தி உள்ளது. இந்த அம்சங்களை முன்வைத்து இன்று ஈரான் தனது வாதத்தை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரான் வாதம் இன்று முடிந்ததும், வாஷிங்டன் தரப்பு வழக்கறிஞர்கள் நாளை ஆஜராகி வாதாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #USSanctions #DonaldTrump #ICJ #IranUSLawsuit
    Next Story
    ×