search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பை உறுதி செய்ய கைகோர்க்கும் மூன்று நாடுகள்
    X

    வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பை உறுதி செய்ய கைகோர்க்கும் மூன்று நாடுகள்

    வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பினை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன. #Denuclearisation #NKorea
    சியோல்:

    அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளால்
    கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா, தற்போது சமாதானத்தையும் அமைதியையும் விரும்புகிறது. முதற்கட்டமாக அணு ஆயுத சோதனை மையத்தை அழித்தது. அத்துடன் அணு ஆயுத திட்டங்களையும் கைவிட தயாராக உள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் சிங்கப்பூர் சந்திப்பின்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை முழுவதும் ஒழிக்கப்படும் என வட கொரிய தலைவர் அறிவித்தார்.



    இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பைத் தொடர்ந்து வட கொரியாவிடம் உள்ள அணு ஆயுதங்களை ஒழிப்பதை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தென்கொரிய வெளியுறவுத்துறை மந்திரி காங் கியுங்-வா மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரி டாரோ கோனோ ஆகியோர் சியோலில் இன்று சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா கூறியபடி அந்த நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ கூறுகையில், ‘வடகொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கு முன்வந்துள்ளது. ஆனால் அவற்றை முற்றாக அழிப்பது பெரிய செயல்முறை, எளிதான காரியமல்ல’ என்றார். #Denuclearisation #NKorea

    Next Story
    ×