என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்: அரபு நாடுகள் வலியுறுத்தல்
Byமாலை மலர்16 April 2018 9:16 PM GMT (Updated: 16 April 2018 9:16 PM GMT)
‘சிரியா நாட்டு மக்கள் மீது ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக சர்வதேச அளவிலான சுதந்திரமான நீதி விசாரணை தேவை என சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கெய்ரோ:
சிரியாவில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியாவும், ஈரானும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. மேலும் சிரியாவின் ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டூமா நகரில் கடந்த வாரம் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாயினர். இதற்கு சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதுபற்றி அரபு நாடுகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ‘சிரியா நாட்டு மக்கள் மீது ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக சர்வதேச அளவிலான சுதந்திரமான நீதி விசாரணை தேவை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சர்வதேச சட்ட விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மற்ற நாடுகளின் விவகாரங்களில் ஈரான் தலையிடுவதையும் கண்டிக்கிறோம். ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலை ஆதரிக்கிறோம்’ என்று கூறப்பட்டு உள்ளது.
சிரியாவில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியாவும், ஈரானும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. மேலும் சிரியாவின் ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டூமா நகரில் கடந்த வாரம் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாயினர். இதற்கு சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதுபற்றி அரபு நாடுகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ‘சிரியா நாட்டு மக்கள் மீது ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக சர்வதேச அளவிலான சுதந்திரமான நீதி விசாரணை தேவை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சர்வதேச சட்ட விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மற்ற நாடுகளின் விவகாரங்களில் ஈரான் தலையிடுவதையும் கண்டிக்கிறோம். ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலை ஆதரிக்கிறோம்’ என்று கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X