search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் தலை தூக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்? - சண்டையில் ஈராக் படை வீரர்கள் 27 பேர் பலி
    X

    மீண்டும் தலை தூக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்? - சண்டையில் ஈராக் படை வீரர்கள் 27 பேர் பலி

    ஈராக்கில் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து நடத்திய தாக்குதலில் ஈராக் அரசுப்படை வீரர்கள் 27 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ISIS
    பாக்தாத்:

    ஈராக்கின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து அட்டூழியம் செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் ஈராக் அறிவித்தது. இந்நிலையில், கிர்குக் பகுதியில் ஈராக்கிய அரசுப்படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அல்-சாத்வுன்யா பகுதியில் திடீரென ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி சரமாரி தாக்குதல்களை நடத்தினர். சில மணிநேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 27 ஈராக் வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலை தங்களது இயக்கத்தினர் நடத்தியதாக ஐ.எஸ் இயத்தின் ஊடகமான அமாக் செய்தி வெளியிட்டுள்ளது. #ISIS #TamilNews
    Next Story
    ×