என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகம் முழுவதும் 110 கோடி பேர் கண் பார்வை இன்றி தவிப்பு
Byமாலை மலர்23 Oct 2017 5:28 AM GMT (Updated: 23 Oct 2017 5:28 AM GMT)
உலக வங்கியின் ‘வளர்ச்சி திட்டங்களை கண்டறிதல்’ அமைப்பு சார்பில் சர்வதேச நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 110 கோடி பேர் கண் பார்வை இன்றி அவதிப்படுவதும் அடையாளம் இன்றி தவிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
உலக வங்கியின் ‘வளர்ச்சி திட்டங்களை கண்டறிதல்’ அமைப்பு சமீபத்தில் சர்வதேச நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது.
அப்போது 110 கோடி பேர் கண் பார்வை இன்றி அவதிப்படுவதும் அடையாளம் இன்றி தவிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு உலக மக்களில் பெரும்பாலானோருக்கு சுகாதாரம் மற்றும் கல்வி அறிவு இல்லாததே காரணமாக கருதப்படுகிறது.
கண் பார்வையற்றவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் உள்ளனர். பார்வையற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் குழந்தைகள் ஆவர்.
இங்குள்ள பெரும்பாலான நாடுகளில் வறுமை, வன்முறை, ஆயுத கலாசாரம் மற்றும் வளர்ச்சியின்மை நிலவுகிறது. இப்பிரச்சனைகளால் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் போதுமான சத்துணவு கிடைப்பதில்லை. அதனால் குழந்தைகளும், பெரியவர்களும் பார்வை இழக்கின்றனர்.
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்வதில்லை. இதனால் குழந்தைகளின் உடல்நலம் குறித்த முழு தகவலும் அறிய முடிவதில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் ‘வளர்ச்சி திட்டங்களை கண்டறிதல்’ அமைப்பு சமீபத்தில் சர்வதேச நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது.
அப்போது 110 கோடி பேர் கண் பார்வை இன்றி அவதிப்படுவதும் அடையாளம் இன்றி தவிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு உலக மக்களில் பெரும்பாலானோருக்கு சுகாதாரம் மற்றும் கல்வி அறிவு இல்லாததே காரணமாக கருதப்படுகிறது.
கண் பார்வையற்றவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் உள்ளனர். பார்வையற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் குழந்தைகள் ஆவர்.
இங்குள்ள பெரும்பாலான நாடுகளில் வறுமை, வன்முறை, ஆயுத கலாசாரம் மற்றும் வளர்ச்சியின்மை நிலவுகிறது. இப்பிரச்சனைகளால் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் போதுமான சத்துணவு கிடைப்பதில்லை. அதனால் குழந்தைகளும், பெரியவர்களும் பார்வை இழக்கின்றனர்.
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்வதில்லை. இதனால் குழந்தைகளின் உடல்நலம் குறித்த முழு தகவலும் அறிய முடிவதில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X