search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகார் கொடுக்க வந்தபோது 10-ம் வகுப்பு மாணவிக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை
    X

    புகார் கொடுக்க வந்தபோது 10-ம் வகுப்பு மாணவிக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை

    புழல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தபோது 10-ம் வகுப்பு மாணவிக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    புழல் பகுதியைச் சேர்ந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் 2-வதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் தாயின் 2-வது கணவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்ததும் மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். 2-வது கணவர் மீது புகார் கொடுப்பதற்காக மாணவியும் அவரது தாயும் புழல் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.

    அங்கு விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதேபோல் அந்த மாணவியின் தாய்க்கும் இன்ஸ்பெக்டர் தொல்லை கொடுத்து இருக்கிறார்.

    இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் திகைத்த மாணவியும், தாயும் கோர்ட்டை நாட முடிவு செய்தனர்.

    இன்று காலை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மாணவியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி பரணிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை வருகிற 10-ந்தேதி தள்ளி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

    பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் தற்போது சென்னையில் உள்ள வேறு ஒரு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
    Next Story
    ×