என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புகார் கொடுக்க வந்தபோது 10-ம் வகுப்பு மாணவிக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை
Byமாலை மலர்7 May 2019 9:21 AM GMT (Updated: 7 May 2019 9:21 AM GMT)
புழல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தபோது 10-ம் வகுப்பு மாணவிக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
புழல் பகுதியைச் சேர்ந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் 2-வதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் தாயின் 2-வது கணவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்ததும் மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். 2-வது கணவர் மீது புகார் கொடுப்பதற்காக மாணவியும் அவரது தாயும் புழல் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.
அங்கு விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதேபோல் அந்த மாணவியின் தாய்க்கும் இன்ஸ்பெக்டர் தொல்லை கொடுத்து இருக்கிறார்.
இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் திகைத்த மாணவியும், தாயும் கோர்ட்டை நாட முடிவு செய்தனர்.
இன்று காலை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மாணவியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பரணிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை வருகிற 10-ந்தேதி தள்ளி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் தற்போது சென்னையில் உள்ள வேறு ஒரு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
புழல் பகுதியைச் சேர்ந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் 2-வதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் தாயின் 2-வது கணவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்ததும் மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். 2-வது கணவர் மீது புகார் கொடுப்பதற்காக மாணவியும் அவரது தாயும் புழல் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.
அங்கு விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதேபோல் அந்த மாணவியின் தாய்க்கும் இன்ஸ்பெக்டர் தொல்லை கொடுத்து இருக்கிறார்.
இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் திகைத்த மாணவியும், தாயும் கோர்ட்டை நாட முடிவு செய்தனர்.
இன்று காலை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மாணவியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பரணிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை வருகிற 10-ந்தேதி தள்ளி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் தற்போது சென்னையில் உள்ள வேறு ஒரு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X