என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுராந்தகம், கும்மிடிப்பூண்டி அருகே கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு
Byமாலை மலர்18 April 2019 8:16 AM GMT (Updated: 18 April 2019 8:16 AM GMT)
மதுராந்தகம் மற்றும் கும்மிடிப்பூண்டி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். வாக்களிக்க கிராம மக்கள் யாரும் வராததால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. #Loksabhaelections2019
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் மூடப்பட்ட இரும்பு தாது உருக்கு தொழிற்சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரும்பு தாது உருக்கு தொழிற்சாலையை மீண்டும் மூடக்கோரி போராட்டம் நடத்தினர். வீடுகளில் கருப்புகொடி ஏற்றுவது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தொழிற்சாலையை மூடாததால் தேர்தலை புறக்கணிக்க அக்கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அந்த கிராமத்தில் 537 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வாக்கு சாவடி எண்.52-ல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் வாக்களிக்க கிராம மக்கள் யாரும் வராததால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. பூத் ஏஜெண்டுகளும் வரவில்லை.
இதையடுத்து டி.எஸ்.பி. கல்பனா மற்றும் போலீசார் நாகராஜ் கண்டிகை கிராமத்துக்கு சென்று பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்.
மதுராந்தகத்தை அடுத்த கே.கே.புதூர் கிராமத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை அழிக்கும் தொழிற் சாலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி அதை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தொழிற்சாலையை மூடக்கோரி கே.கே.புதூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அந்த கிராமத்தில் 1800 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க நடுநிலை பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்களிக்க கிராம மக்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. #Loksabhaelections2019
கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் மூடப்பட்ட இரும்பு தாது உருக்கு தொழிற்சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரும்பு தாது உருக்கு தொழிற்சாலையை மீண்டும் மூடக்கோரி போராட்டம் நடத்தினர். வீடுகளில் கருப்புகொடி ஏற்றுவது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தொழிற்சாலையை மூடாததால் தேர்தலை புறக்கணிக்க அக்கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அந்த கிராமத்தில் 537 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வாக்கு சாவடி எண்.52-ல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் வாக்களிக்க கிராம மக்கள் யாரும் வராததால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. பூத் ஏஜெண்டுகளும் வரவில்லை.
இதையடுத்து டி.எஸ்.பி. கல்பனா மற்றும் போலீசார் நாகராஜ் கண்டிகை கிராமத்துக்கு சென்று பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்.
மதுராந்தகத்தை அடுத்த கே.கே.புதூர் கிராமத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை அழிக்கும் தொழிற் சாலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி அதை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தொழிற்சாலையை மூடக்கோரி கே.கே.புதூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அந்த கிராமத்தில் 1800 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க நடுநிலை பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்களிக்க கிராம மக்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. #Loksabhaelections2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X