என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணப்பாறை அருகே தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
Byமாலை மலர்18 April 2019 5:24 AM GMT (Updated: 18 April 2019 5:24 AM GMT)
அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் மணப்பாறை அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். #LoksabhaElections2019
மணப்பாறை:
கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி. இங்குள்ள நகராட்சி 3-வது வார்டு பகுதியில் தாய் கிராமமான செவலூர், சங்கமரெட்டியபட்டி கிராமங்கள் உள்ளன.
இதில் சங்கமரெட்டியபட்டியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக இங்கு வசதிக்கும் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகளில் ஒன்றுக்கு கூட குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.
இங்கு வசிக்கும் பொது மக்கள் குடிநீருக்காக சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆழிப்பட்டிக்கு செல்லவேண்டும். அங்கும் காவிரி குடிநீர் குழாயில் கசியும் நீரைத்தான் பிடித்து வருகிறார்கள். அத்துடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பெயர்ந்து சாலையின் சுவடே தெரியாத அளவில் காணப்படுகிறது.
இதேபோல் சாக்கடை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் தேர்தல் காலத்திலாவது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் கோரிக்கைகள் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர்.
இங்கு 180 வாக்குகள் உள்ளன. அவர்கள் செவலூரில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. #LoksabhaElections2019
கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி. இங்குள்ள நகராட்சி 3-வது வார்டு பகுதியில் தாய் கிராமமான செவலூர், சங்கமரெட்டியபட்டி கிராமங்கள் உள்ளன.
இதில் சங்கமரெட்டியபட்டியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக இங்கு வசதிக்கும் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகளில் ஒன்றுக்கு கூட குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.
இங்கு வசிக்கும் பொது மக்கள் குடிநீருக்காக சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆழிப்பட்டிக்கு செல்லவேண்டும். அங்கும் காவிரி குடிநீர் குழாயில் கசியும் நீரைத்தான் பிடித்து வருகிறார்கள். அத்துடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பெயர்ந்து சாலையின் சுவடே தெரியாத அளவில் காணப்படுகிறது.
இதேபோல் சாக்கடை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் தேர்தல் காலத்திலாவது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் கோரிக்கைகள் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர்.
இங்கு 180 வாக்குகள் உள்ளன. அவர்கள் செவலூரில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. #LoksabhaElections2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X