search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் மன்னன் பத்மராஜன் இன்று தர்மபுரி எம்.பி. தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த காட்சி
    X
    தேர்தல் மன்னன் பத்மராஜன் இன்று தர்மபுரி எம்.பி. தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த காட்சி

    தர்மபுரி எம்பி தொகுதியில் 200-வது முறையாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன்

    தர்மபுரி எம்.பி. தொகுதியில் இன்று சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் மனு தாக்கல் செய்தார். 200-வது முறையாக போட்டியிடுகிறார்.
    தர்மபுரி:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் 200-வது முறையாக தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளார்.

    தர்மபுரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மலர்விழியிடம் அவர் மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து பத்மராஜன் கூறியதாவது:-

    நான் ஜனாதிபதி தேர்தல் உள்பட சட்டமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளேன். முக்கிய தலைவர்களையும் எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.

    1988 முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். முதல்-அமைச்சர் முதல், உள்ளூர் எம்.எல்.ஏ. வேட்பாளர் வரை அனைவரையும் எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். இன்று 200-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×